ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா (ஆர்பிஐ) விரைவில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புதிய 10 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விட இருக்கின்றது.
இன்று ஆரிபிஐ வெளியிட்ட அறிக்கையில் மகாத்மா காந்தி வரிசை 2005-ன் கீழ் 'L' எழுத்துடன் கூடிய எண்களுடன் ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் அவர்களின் கையெழுத்துப் போடப்பட்டு வெளியிட இருக்கின்றது.
இந்தப் புதிய 10 ரூபாய் நோட்டு 2017-ம் ஆண்டு ஆசிடப்பட்ட நோட்டுகளாகக் குறிப்பிடப்பட்டு இருக்கும். மேலும் இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமான பேனல்கள் ஏறுவரிசையில் அளவிலும் இருக்கும் அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளது.
முதல் மூன்று ஆல்பா எண் எழுத்துகள் (முன்னொட்டு) அளவு நிலையான அளவில் இருக்கும்.
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பழைய ரூபாய் நொட்டுகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்றும் மத்திய வங்கியின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.