உலகளவில் சிறந்த கார் தயாரிப்பு நிறுவனங்களான டொயாட்டா மற்றும் சுசூகி நிறுவன தலைவர்கள் இந்திய பிரதமர் மோடியைச் சந்தித்துத் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வணிக வாய்ப்புகள் குறித்து ஆலோசித்துள்ளனர்.
பிரதமர் மோடி அழைத்ததன் பெயரில் டொயோட்டா நிறுவன தலைவர் அக்கியோ டொயாட்டாவும், சுசூகி நிறுவன தலைவர் ஓசாமு சுசூகியும் கூட்டாண்மை மற்றும் எதிர்காலத் தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்த இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் பிரதம மந்திரி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆடோமொபைல் துறைக்கு ஓர் நற்செய்தி
டொயோட்டாவின் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி உலகத் தலைமை உடன் சிறு ரகக் கார் தயாரிப்பில் வலிமையாக உள்ள சுசூகி நிறுவனத்துடன் கூட்ட சேர்ந்து இந்தியாவில் முதலீடுகளைச் செய்ய உள்ளன.
புதிய வாய்ப்புக்கள்
இதனால் இந்தியாவில் கார் தயாரிப்பில் மேலும் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் அதிக அளவிலான உதிரிப்பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா
இந்த இரு நிறுவனங்களும் கூட்டு சேர்வதால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் மேக் இன் இந்தியா திட்டம் மேலும் விளம்பரப்படுத்த உதவும் என்று கூறப்படுகின்றது. அதுமட்டும் இல்லாமல் புதிய தொழில்நுட்ப கார்களை ஏற்றுமதி செய்யவும் இது உதவி செய்யும்.
இந்தியாவிற்கு உள்ள நன்மைகள்
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் இந்த இரண்டு ஜப்பான் நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய வணிகச் சூழல், பாதுகாப்பு, மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் வணிக உறவுகளை ஆராய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ பூம்
சுய ஓட்டுநர், பாதுகாப்பு, மற்றும் உற்பத்தி பொருட்கள், உதிரிப் பாகங்கள் போன்றவற்றை மியூச்சுவலாகப் பகிர்ந்து கொண்டு கூட்டு சேர்ந்து வணிகத்தை அதிகரிக்க இந்த இரு நிறுவனங்கள் இடையேயும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
மாருதியுடனான ஒப்பந்தம்
சுசூகி நிறுவனத்திற்கு ஏற்கனவே மருதி சூசுகி நிறுவனத்துடன் உள்ள ஒப்பந்தம் என்னவாகும் என்றும் இப்போது கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்த விவாதங்களுக்காகவே இரண்டு நிறுவன தலைவர்களும் மோடியைச் சந்தித்து இருப்பதாகவும் கூறப்படுகின்றது.