தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த 100 யூனிட்-க்கும் குறைவான பயன்படுத்தும் வீடுகளுக்கு மின்சாரக் கட்டணத்தை முழுமையாக விலக்கு அளித்தது.
இந்நிலையில் 2017-18 நிதியாண்டில் தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் நிலையிலும், இலவச 100 யூனிட் மின்சாரத் திட்டம் தொடரும் என நிதியமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்பட்டும் மின்சாரத்தில் இருக்கும் உபரி மின்சாரத்தை வெளிமாநிலத்திற்கு விற்க புதிய வழித்தடம் அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
2017-18ஆம் நிதியாண்டில் மென்பொருள் ஏற்றுமதியின் அளவு ரூ1,00,300 கோடியை எட்டும் நிலையில், இத்துறையின் வளர்ச்சிக்காக ரூ116 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளதாகவும் பட்ஜெட் அறிக்கையில் குறிப்பிட்டார் நிதியமைச்சர் ஜெயகுமார்.
இதனைத் தொடர்ந்து மதுரை, சேலம், திருச்சியில் தொழில் ஊக்குவிப்பு மையம் அமைக்கப்பட உள்ளதாகப் பட்ஜெட் அறிக்கை தாக்கலில் அறிவிக்கப்பட்டது.
உலக முதலீட்டாளர் மாநாட்டு நடத்த ரூ75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும் ஜெயகுமார் கூறினார்.