சென்னை: தமிழக விவசாயிகளின் நலனைக் காக்கவும், இத்துறையைத் தொடர்ந்து வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்ல 2017-18 நிதியாண்டிற்குச் சுமார் 7,000 கோடி ரூபாயை பயிர்கடனுக்காக நிதிஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.
இதனுடன் விவசாயத் துறையின் வளர்ச்சிக்காக வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விடக் கூடுதலாக 500 மையங்களை 2018ஆம் நிதியாண்டில் திறக்கப்பட்ட உள்ளதாகப் பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிர் காப்பீடு மானியம்
பயிர்கடனுக்காக 7,000 கோடி ரூபாயை நிதிஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு பயிர்காப்பீடு மானிய திட்டத்துக்கு ரூ522 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
100 லட்சம் மெட்ரிக் டன்
விவசாயிகளுக்குச் சொட்டுநீர் பாசனத்தின் கீழ் கரும்பு சாகுபடிக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்றும், 2017-18 நிதியாண்டில் மட்டும் 100 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்திக்கு இலக்கை நிர்ணயம் செய்துள்ளது தமிழக அரசு
உழவர் பாதுகாப்பு திட்ட
இறுதியாக உழவர் பாதுகாப்பு திட்ட நிவாரணத் தொகை ரூ20,000 ஆக உயர்த்தியுள்ளது தமிழக அரசு.
சர்க்கரை ஆலைகள்
தமிழ்நாட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சி மற்றும் நிதிதேவைக்காகத் தமிழக அரசு ரூ134.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
100 நாள் வேலைத்திட்டம்
மக்கள் மத்தியில் அதிகளவில் வரவேற்பு பெற 100 நாள் வேலைத்திட்டத்துக்கு ரூ1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ள மட்டும் அல்லாமல் சமூக நலத்துறைக்கு ரூ4,781 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிற திட்டங்கள்
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.988 கோடியும், ஈழ அகதிகள் நலனுக்கு ரூ116 கோடியும், இளைஞர் நலனுக்கு ரூ165 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.