ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இன்று ஏர்செல் நிறுவனத்துடன் இணைவதற்கான அனுமதியை காம்பிடிஷன் கமிஷன் ஆப் இந்தியா வழங்கியது.
காம்பிடிஷன் கமிஷன் ஆப் இந்தியா நிறுவனத்திடம் இருந்து ரிலையன்ஸ் நிறுவனம் இணைவதற்கான அனுமதியைப் பெற்றதை அடுத்து ஏர்செல் நிறுவனத்தை விட்டு டிஷ்நெட் நிறுவனம் வெளியேறும்.
2016-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனம் இரண்டும் இணைவது குறித்து அறிவித்தனர். இந்த இணைவிற்குப் பிறகும் ஏர்செல் நிறுவனத்திடம் 50 சதவீத பங்கு அப்படியே இருக்கும்.
செபி அனுமதி
ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே செபியிடம் இருந்து தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை இரண்டிலும் இருந்து பகிர்வதற்கான அனுமதியைப் பெற்றுள்ளது.
இந்த இணைவினால் ரிலையன்ஸ் நிறுவனத்தில் 20,000 கோடி கடனும், ஏர்செல் நிறுவனத்தின் 4,000 கோடி கடனும் 2017-ம் ஆண்டுடன் முடிவுக்கு வரும் என்று இரண்டு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
மதிப்பு
மேலும் ஏர்செல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இணைவதினால் மூன்றாம் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையனஸ் பெயரெடுக்கும். அதுமட்டும் இல்லாமல் 65,000 கோடியாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.
கடன்
இரண்டு நிறுவனங்களும் இணைந்து 14,000 கோடிகளாகத் தங்களது கடன் மதிப்பைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் புதிய நிறுவனமாக உருவெடுக்கும் இந்த நிறுவனத்திற்கு மொத்தமாக 28,000 ரூபாய் கடனாக இருக்கும்.
ஜியோவிற்குச் சவால்
வோடாபோன், ஐடியா நிறுவனங்களைப் போன்று ரிலையன்ஸ் மற்றும் ஏர்செல் இரண்டு நிறுவனங்கள் இடையிலும் 50 சதவீதம் பங்குகளாக இருக்கும். இந்த நிறுவனங்களும் இணைவது புதிதாகத் துவங்கப்பட்டுள்ள ஜியோ நிறுவனத்திற்கு ஒரு சவாலாகவே இருக்கும்.