இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் பிளிப்கார்ட் நிறுவனம் வர்த்தக அளவுகளில் முதல் இடத்தில் இருந்தாலும் அதிகளவில் நஷ்டத்தில் உள்ளது. இதன் காரணமாகத் தனது வர்த்தகத்தை அதிகரிக்க ஈபே உடன் இணையத் திட்டமிட்டுள்ளது.
உலகிளவில் இணைய வர்த்தகத்தில் ஈட்டுப்பட்டுள்ள ஈபே.காம் தனது இந்தியா வர்த்தகப் பிரிவான ஈபே.இன் நிறுவனத்தைப் பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைக்க இரு நிறுவனங்களுக்கும் முடிவு செய்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இந்த இணைப்பிற்குப் பின் ஈபே நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்தில் 500 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் ஈபே நிறுவனத்தின் ஆஸ்தான முதலீட்டாளர்களான மைக்ரோசாப்ட் மற்றும் டென்சென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 1.5-2 பில்லியன் டாலர் வரையில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த முதலீட்டுடன் பிளிப்கார்ட் அமேசான், அலிபாபா நிறுவனங்களின் ஆதிக்கத்தைத் தகர்த்தெரிய உள்ளது.