ஆந்திர பிரதேச மாநிலம் வளர்ச்சி தலைநகர் வளர்ச்சி பணிகளுக்காக அதிக முதலீடுகள் எதிர்பார்த்து வரும் நிலையில் இந்தியா டூடே இந்தியாவின் பணக்காரர் முதல்வர்கள் யார் மற்றும் ஏழ்மையான முதலமைச்சர்
என்ற பட்டியல் வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் 29 மாநிலங்களின் முதல்வர்களின் சொத்துக்களின் அளவை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
முதல் இடம்
இந்தியாவில் கோடிஸ்வரார் முதல்வராக முதல் இடத்தை 177 கோடி சொத்து மதிப்புடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிடித்துள்ளார். இவர் ஹெரிடேஜ் ஃபார்ம்ஸ், ஹெரிடேஜ் சூப்பர் மர்க்கெட் போன்ற வணிகங்களை இவர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இடம்
சந்திரபாபு நாயுடுவிற்கு அடுத்த இடத்தை அருணச்சல பிரதேச முதல்வர் பெம்ம கந்து 129 கோடி சொத்து மதிப்புடன் பிடித்துள்ளார்.
சந்திரசேகர ராவ்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு முதல் இடம் பிடித்த நிலையில் தெலுங்கான முதல் கேசிஆர் அவர்கள் 15 கோடி சொத்து மதிப்புடன் 5 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மூன்றாவது இடம்
அன்மையில் பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் ஆன அமரீந்தர் சிங் 48 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
நான்காவது இடம்
ஹிமாச்சல முதலமைச்சர் வீர்பத்ர சிங் 34 கோடி சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி
முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணம், பன்னீர் செல்வம் ராஜிநாமா அதற்குப் பிறகு நடந்த ரெசார்ட் அரசியல் போன்றவற்றுக்குப் பிறகு பதவி தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியிடம் 7.80 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்து இருப்பதாக 2016-ம் தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏழ்மையான முதல்வர்கள்
உத்திரபிரதேசத்தின் புதிய முதல்வரான யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு 72 லட்சமும், ஜார்க்கண்ட் ரகுபர் தாஸ் அவர்களுக்கு 72 லட்சமும், ஹர்யானா முதல்வர் லால் கஹ்ட்டர் அவர்களுக்கு 61 லட்சமும், ஜம்மு & காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தியிடம் 55 லட்சம் சொத்து மதிப்பும் உள்ளது.
இந்தியாவிலேயே ஏழ்மையான முதல்வர் என்றால் அது திருப்பூரா முதலவர் மாணிக் சர்க்கார் அவர்கள் ஆவார்.
குற்ற வழக்குகள் அதிகம் உள்ள முதல்வர்கள்
குற்ற வழக்குகள் அதிகம் உள்ளவர்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபாண்ட்விஸ் 22 குற்ற வழக்குகளுடன் முதல் இடத்திலும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது 3 வழக்குகளும், தெலுங்கானா முதல்வர் கேசிஆர் மீது 2 வழக்குகளும், ஹர்யானா முதல்வர் கஹட்டார் மீது 1 வழக்கும் நிலுவையில் உள்ளது.