சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்பு நியூ கினியாவில் குக் பள்ளத்தாக்கில் வாழை வளர்ப்பு அதிகமாக நடந்தது வந்தது. பின்னர் இது வெப்பமண்டல நாடுகளுக்கும் பரவத் துவங்கியது.
வாழைப்பழம் எளிமையாகச் சரிமனம் ஆகக் கூடிய ஒரு உணவு வைகையாகும், அதன் காரணமாக இது இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் கரும்பு தோட்டங்களில் அதிக அளவில் வளர்க்கப்பட்டது வந்தது.
இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் முதன்மை மாநிலமாக இருந்த கேரளா தமிழ்நாட்டின் விளைச்சலில் எப்படிப் பின் தங்கியதோ அதே போன்று இப்போது வாழைப்பழம் உற்பத்தியிலும் பின்தங்கியுள்ளது.
வாழைப்பழம் உற்பத்தியில் உலகளவில் அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக இன்று இந்தியா வளர்ந்துள்ளது. ஆனால் எந்தச் சிறு வெப்பமண்டல நாடுகளும் வாழைப்பழ உற்பத்தியில் பெரிதாக வளரவில்லை. 2014-ம் ஆண்டு எந்த ஒரு நாடும் உற்பத்தி செய்யாத அளவிற்கு இந்தியா உற்பத்தி செய்து சாதனைப் படைத்தது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த பழங்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரு பங்காக வாழைப்பழம் உள்ளது. தமிழ்நாடு-14.2 சதவீதம் , குஜராத் - 13.8 சதவீதம், ஆந்திர பிரதேசம் - 13.4 சதவீதம் என மூன்று மாநிலங்கள் மட்டும் இந்தியாவின் மொத்த வாழைப்பழம் உற்பத்தியில் 40 சதவீதத்தைப் பிடித்துள்ளன. மேலே கூறிய மூன்று மாநிலங்களைத் தவிர்த்து பிற மாநிலங்கள் அனைத்தும் சேர்த்து 58.6 சதவீதம் வரை வாழைப்பழம் உற்பத்தியை அளிக்கின்றன. வாழைப்பழ உற்பத்தியில் முதல் இடத்தைப் பிடித்து வந்த கேரளா சென்ற ஆண்டுப் பெய்ய வேண்டிய இரண்டு பருவமழை பெய்யாமல் ஆறு, ஏரிகள், குளங்கள் அனைத்தும் வறண்டு போய்க் குடி நீருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுவே வாழைப்பழம் மற்றும் தேங்காய் மட்டும் இல்லாமல் மீன் உற்பத்தியும் 50 சதவீதம் குறைந்து இருப்பதற்காகக் கூறப்படுகின்றது.முதல் இடத்தில் இந்தியா
அதிக உற்பத்தி
வாழைப்பழம் அதிகம் உற்பத்தி செய்துள்ள இந்திய மாநிலங்கள்
பிற மாநிலங்களின் நிலை
கேரளா ஏன் முதல் இடத்தைப் பிடிக்கவில்லை?
தேங்காய் விளைச்சலில் கேரளாவை முந்திய தமிழகம்..!