இந்தியாவில் தனிநபர்கள் வங்கி கணக்குகள் மத்தியில் செய்யப்படும் NEFT பரிமாற்றம் சேவை ஜூலை 10ஆம் தேதி முதல் மிகவும் வேகமாக இயங்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதன் மூலம் குறிப்பிட நேரத்திற்குள் NEFT மூலம் பரிமாற்றம் செய்யப்பட்ட பணம் வங்கி கணக்கிற்குள் சேர்ந்து விடும். ஆனால் ஆர்டிஜிஎஸ் போல் உடனடியாக இருக்காது என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
NEFT பரிமாற்றத்தில் செய்யப்பட்ட புதிய மாற்றங்கள் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை:
11 பரிமாற்றங்கள் சேர்ப்பு
ஜூலை 10ஆம் தேதியுடன் ரிசர்வ் வங்கி 11 NEFT பரிமாற்றங்களைச் சேர்க்க உள்ளது. இதன் மூலம் ஒருவர் ஒரு நாளுக்கு 23 முறை பரிமாற்றம் செய்துக்கொள்ளலாம். தற்போது காலை 8 முதல் மாலை 7 வரை வெறும் 12 பரிமாற்றங்கள் மட்டுமே செய்ய முடியும். இந்த எண்ணிக்கை தற்போது 23ஆக உயர்ந்துள்ளது.
நேரம் மாற்றமில்லை
NEFT பரிமாற்றங்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்தாலும், பரிமாற்றம் செய்யப்படும் நேரம் காலை 8 முதல் மாலை 7 வரை என்பதில் எவ்விதமான மாற்றமும் இல்லை.
2 மணிநேரத்தில் பணம் திரும்பக் கிடைக்கும்.
நீங்கள் பணம் அனுப்பிய கணக்கிற்கு எதேனும் காரணமாகத் தத்தம் கணக்காளர்களுக்குப் பணம் போய்ச் சேரவில்லை என்றால், அடுத்த இரண்டு மணி நேரத்தில் உங்கள் பணம் அனுப்பட்ட கணக்கிற்கு வைப்புச் செய்யப்படும்.
கட்டணம் குறைவு
வங்கியில் பணம் வைப்புச் செய்வது, கேஷ் டெப்பாசிட் இயந்திரத்தில் பணம் வைப்பு செய்யவதை காட்டிலும் NEFT வாயிலான பணப் பரிமாற்றங்களின் கட்டணம் மிகவும் குறைவு.
அளவீடு
மேலும் NEFT பரிமாற்றம் செய்யக் குறைந்தபட்ச அளவீடு ஏதுமில்லை.