இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பிரிவில் கொடிகட்டி பறக்கும் பேடிஎம் நிறுவனம் மே 23(இன்று) தனது பேமெண்ட்ஸ் வங்கி வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது.
ஆன்லைன் சந்தையைப் போலவே போட்டி மிகுந்த இத்துறையில் அடுத்த 3 வருடத்தில் 50 கோடி வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் எனத் திட்டமிட்டுக் களத்தில் இறங்கியுள்ளது.
4 சதவீத வட்டி..!
சீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா-வின் மிகப்பெரிய முதலீட்டில் இயங்கும் பேடிஎம், புதிதாகத் துவங்கியுள்ள பேமெண்ட்ஸ் வங்கியின் வைப்புத் திட்டத்திற்குச் சதவீத வட்டியை அளிக்க முடிவு செய்துள்ளது.
இலவசம்
தற்போது வங்கிகள் அனைத்தும் பரிமாற்றத்திற்குக் கட்டணத்தை வசூலித்து வரும் நிலையில் பேடிஎம் நிறுவனம் அனைத்து இணைய வழி பரிமாற்றத்தையும் இலவசமாக அளிக்க முடிவு செய்துள்ளது. மேலும் டெப்பாசிட் செய்வோருக்கு கேஷ்பேக் ஆஃப்ரும் அளிக்கிறது.
400 கோடி ரூபாய்
இப்புதிய பேமெண்ட்ஸ் வங்கி சேவைக்காகப் பேடிஎம் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மேலும் இந்த முதலீட்டுத் தொகை அடுத்தச் சில வருடங்களில் 1000 கோடி வரை உயரும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிளைகள்
பேடிஎம் பேமெண்ட் வங்கி முதல் வருடத்தில் மட்டும் சுமார் 31 வங்கிகளை, 3000 வாடிக்கையாளர் சேவை முனைகள் ஆகியவற்றை அமைக்க முடிவு செய்ததுள்ளது.
பேமெண்ட்ஸ் வங்கி
பொதுவாகப் பிற வங்கிகளைப் போல் அல்லாமல் பேமெண்ட்ஸ் வங்கிக் கடன் அளிக்க முடியாது, ஆனால் வங்கிகள் அளிக்கும் அனைத்து விதிமானச் சேவைகளையும் இந்தப் பேமெண்ட்ஸ் வங்கி அளிக்க முடியும்.
சமீபத்தில் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியைத் துவங்கியது.