டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து வீல் சேர் உடன் 63 வயது முதியவர் கடத்திய 3.5 கிலோ தங்கம், சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் கண்டுப்படிக்கப்பட்டது.
இந்தக் கடத்தலில் தொடர்புடை இதே விமானத்தில் பயணித்த மற்றொரு இளைஞரையும் சுங்க அதிகாரிகள் படித்துள்ளனர்.
புகைப்படம்: ஹிந்துஸ்தான்டைம்ஸ்
கடத்தப்பட்ட தங்கம் முதியவரின் ஷார்ட்ஸ் பதுக்கிவைக்கப்பட்டு இருந்தது. இவரை உடனடியாக விசாரணை செய்யும் போது, முதியவர் அளித்த தகவலின் பெயரில் இந்தக் கடத்தலில் தொடர்புடைய மற்றொரு நபரையும் சுங்க துறை அதிகாரிகள் படித்தனர்.
இதுக்குறித்துக் கஸ்டம்ஸ் பிரிவின் துணை கமிஷனர் கோவிந்த் கார்க் கூறுகையில், 63 வயதான இந்த முதியவர், துபாயில் இருந்து டெல்லிக்கு வந்த இறங்கிய போது வீல் சேர் கேட்டுள்ளார். அப்போது ஷார்ட்ஸ் பதுக்கிவைக்கப்பட்டு இருந்த தங்கம் கீழே விழுந்துவிடக்கூடாது என ஷார்ட்ஸை இறுக்கி கட்டியுள்ளார்.
இதன் பின் வழக்கமாகச் செய்யப்படும் சோதனையில் தங்கம் அவரது ஷார்ட்ஸில் பதுக்கிவைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது எனக் கோவிந் தெரிவித்தார்.