6 மாசம் தான்.. ஐடி ஊழியர்களுக்கு ஓகோன்னு வாழ்க்கை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த ஒரு மாதமாக ஐடி நிறுவனங்களின் பணிநீக்கம், செலவின குறைப்பு, ஆட்டோமேஷன் எனப் பிரச்சனைகளை மட்டுமே இருந்த நிலையில், தற்போது புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இதன் மூலம் அடுத்த 6 மாதத்தில் பிரச்சனைகள் அனைத்தும் முழுமையாகத் தீர்ந்து சந்தை இயல்பு நிலைக்குத் திரும்பும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.

 

இதன் மூலம் தொடர்ந்து ஊழியர்களின் பணிநீக்கத்தை மட்டுமே சந்தித்து வந்த ஐடி ஊழியர்கள் மத்தியில் இந்தக் கணிப்பு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

6 மாதம் மட்டுமே

6 மாதம் மட்டுமே

இந்திய வேலைவாய்ப்பு சந்தை அடுத்த 6 மாதத்திற்கு நேர்மறை மற்றும் எதிர்மறையாக மட்டுமே இருக்கும், காரணம் அனைத்து துறைகளிலும் ஆட்டோமேஷன் அதிகளவில் செய்யப்பட்டு உள்ள காரணத்தால் புதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை சற்று குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக வயாப்பு

அதிக வயாப்பு

அதேபோல் பிரஷ்ஷர்கள், மிட்லெவல் ஊழியர்களுக்கு அடுத்த 6 மாத காலத்தில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மேலும் சில பெரிய நிறுவனங்களில் மட்டுமே உயர் அதிகாரிகள் மற்றும் CXO அளவில் பணிகள் கிடைக்கும்.

இதனால் ஐடித் துறை மட்டுமல்லாமல் பிற அனைத்துத் துறை சார்ந்த ஊழியர்களும் இது ஒரு நல்ல வாய்ப்பு.

 

2ஆம் தர நகரங்கள்
 

2ஆம் தர நகரங்கள்

அதேபோல் இந்த 6 மாத காலத்தில் இந்தியாவில் 2ஆம் தர நகரங்கள் அதாவது கோயம்புத்தூர், மைசூர் போன்ற நகரங்களில் வேலைவாய்ப்பு குறைவாக இருக்கும் என வேலைவாய்ப்பு சந்தை ஆய்வு கூறுகிறது.

முக்கியத் துறைகள்

முக்கியத் துறைகள்

அடுத்த 6 மாத காலத்தில் இந்தியாவில் சில முக்கியத் துறைகள் அதிகளவிலான பாதிப்புகளைச் சந்திக்க உள்ளது, இதில் ஸ்டார்ட்அப், டெலிகாம், பிபிஓ ஆகியவற்றுடன் ஐடி துறையும் உள்ளது.

இதனால் ஊழியர்கள் வேலைவாய்ப்பை இழந்தாலும் மனம் தளரவேண்டாம் சந்தையில் தேவை அதிகமாக உள்ளது.

 

6 மாதத்திற்குப் பின்

6 மாதத்திற்குப் பின்

இதேபோல் அடுத்த 6 மாத்திற்குப் பின் அதாவது 2018ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் ஐடி மற்றும் இன்ஜினியர்ங் வேலைவாய்ப்புகள் அதிகளவில் சந்தையில் உருவாகும் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் இக்காலகட்டத்தில் ஐடி மற்றும் இன்ஜினியர்ங் வேலைவாய்ப்புகள் மட்டுமல்லாமல், நிதியியல் சேவை, ஹெல்கேர், பார்மா மற்றும் கேபிஓ ஆகிய துறைகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக வேலைவாய்ப்புகள் இருக்கும் எனத் தெரிகிறது.

 

எல்லாம் சரியாகிவிடும்...

எல்லாம் சரியாகிவிடும்...

ஐடி ஊழியர்கள் தற்போது சந்திக்கும் பிரச்சனை எல்லாம் வெறும் 6 மாதத்திற்கு மட்டுமே. அதன் பின்னர்ச் சந்தை முழுமையாகச் சீரடைந்து இயல்பான நிலைக்குத் திரும்பும் என்பது உறுதி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT people dont panic, just 6 months Job market is back

IT people dont panic, just 6 months Job market is back
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X