இந்திய ராணுவம் முதன் முதலாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புல்லட் பூருப் ஜாக்கெட்டினை பயன்படுத்த இருக்கின்றது.
இதற்கு முக்கியக் காரணம் பெங்காலியை சேர்ந்த விஞ்ஞானி பேராசிரியர் சாந்தானு பூமிக் ஆவார். இதனை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு இப்போது வழங்கியுள்ளது.
மேக் இன் இந்தியா
பாதுகாப்பு அமைச்சக அதிகாரம் கொண்ட குழு, இந்தப் புல்லட் பூருப் ஜாக்கெட்டை அங்கீகரித்தது, இது உள்நாட்டு நவீன இலகுரகத் தெர்மோபோளாஸ்டிக் தொழில்நுட்பத்திலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தயாரிப்பு பிரதமர் மோடி அவர்களின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முழுமையாக உள்நாட்டுத் தயாரிப்பில் உருவாக்கபப்ட்டுள்ளது. இந்த ஜாக்கெட்டினை பிரதமர் அலுவலகம் அனுமதித்த பிறகு இந்திய ராணுவத்திற்காகக் கொள்முதல் செய்யப்படும்.
கூட்டு முயற்சி
DRDO மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் இரண்டும் இணைந்து கூட்டு முயற்சியில் செயல்பட்டதினால் 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட புல்லட் பூருப் ஜாக்கெட்டினை இந்திய ராணுவம் பயன்படுத்த உள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஜாக்கெட்
தற்போது இந்திய ராணுவம் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான புல்லட் புரூப் ஜாக்கெட்டினை பயன்படுத்தி வருகின்றது.
இந்திய ஜாக்கெட்
பேராசிரியர் சாந்தானு பூமிக் அவர்களால் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் ஜாக்கெட் 50,000 ரூபாய் தான் ஆகும். அதனால் இந்திய ராணுவத்திற்கு 20,000 கோடி ஆண்டுக்குச் செலவு குறையும்.
எடை
தற்போது இந்திய ராணுவம் பயன்படுத்தி வரும் புல்லட் புரூப் ஜாக்கெட் 15 முதல் 18 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
இதுவே பேராசிரியர் சாந்தானு பூமிக் அவர்களால் உருவாக்கப்பட்ட ஜக்கெட் 1.5 கிலோ தான் இருக்கும்.
திறன்
இதில் 20 அடுக்குகள் உள்ளன. கார்பன் ஃபைபர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதால் 57 டிகிரி செல்சியஸில் கூட இந்த ஜாக்கெட் முறையாகச் செயல்பட உதவும்.
யார் இந்தச் சாந்தானு பூமிக்?
கோயமுத்தூர் அம்ரிதா பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறை தலைவராக உள்ளவர் தான் இந்தப் பேராசிரியர் சாந்தனு பூமிக்.
அவர் தனது புதிய கண்டுபிடிப்புக்கு அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார், மேலும் திட்டத்திற்கான உத்தியோகபூர்வ அங்கீகாரத்தைப் பெறுவதில் அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். முன்னாள் ராணுவ துணைத் தளபதி லெப்டினன் ஜெனரல் சுப்ரதா சஹாவுக்கு நன்றி தெரிவித்தார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு தனது கண்டுபிடிப்பை அர்ப்பணித்தார்.