2015-2016 நிதி ஆண்டில் அரசிடம் இருந்து வரிச் சலுகைகள் பெற்ற பல நிறுவனங்கள் கோடி கணக்கில் சம்பாதித்தும் 1 ரூபாய் வரி கூடச் செலுத்தவில்லை. ஏன் சில நிறுவனங்கள் வரிச் செலுத்துவதில் பூஜியத்தை விடவும் குறைவாகவும் உள்ளது என்று அன்மையில் இந்தியா ஸ்பெண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
1980-ம் ஆண்டு மத்திய அரசு குறைந்தபட்ச மாற்று வரி அதாவது மினிமம் அல்டெர்னேட் டாக்ஸ் (MAT) என்ற வரியை நல்ல லாபம் பெற்ற வரிச் சலுகைகள் உள்ள நிறுவனங்களும் செலுத்த வேண்டும் என்று உத்தரிவிட்டது.
அந்தக் குறைந்தபட்ச மாற்று வரியின் கீழ் நிறுவனங்கள் 18.5 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டும். ஆனால் 2014-2015ம் ஆண்டி நிதி ஆண்டில் லாபம் பெற்ற 52,911 நிறுனங்கள் வரி செலுத்தவில்லை.
சிறு நிறுவனங்களை விடக் குறைந்த வரி செலுத்திய பெரு நிறுவனங்கள்
நடைமுறையில் வரி விகிதம், உண்மையில் வரிக்கு முந்தைய இலாபம் மூலம் வகுக்கப்படும் வரி எனக் கணக்கிடப்பட்ட இலாபங்களைக் கொண்ட நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. 2012-13 மற்றும் 2015-16 க்கு இடையில் பயனுள்ள வரி விகிதங்கள் அதிகரித்தாலும், பல விதிவிலக்குகள், குறிப்பாகப் பெரிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, கார்ப்ரேட் நிறுவனங்கள் 34.47% சட்டப்பூர்வ வரி விகிதத்தைக் கொண்டுள்ளன, அவை இலாபத்தில் செலுத்தப்பட வேண்டும். 2015-16 ஆம் ஆண்டில் பயன்பாட்டு வரி விகிதம் 28.24% ஆக இருந்தது, அதுவே 2014-15 (24.67%) விட அதிகமாக இருந்தது.
சிறு நிறுவனங்களுக்கு வரி அதிகம்
இந்தப் பயன்பாட்டு வரி 2015-2016ம் காலாண்டில் 1 கோடி லாபம் பெற்று இருந்தால் 30.26 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டும். இதுவே நிறுவனங்கள் 500 கோடிக்கும் அதிகமாக லாபம் பெற்றுள்ள போது 25.90 சதவீதம் வரியாகச் செலுத்த வேண்டும்.
இதனைப் பார்க்கும் போது நிறுவனங்கள் பெறும் நிறுவனங்களை விடச் சிறு நிறுவனங்களுக்கு வரி அதிகமாகவே உள்ளது.
2015-2016 ஆண்டில் துறை வாரியாக வரி செலுத்த வேண்டிய விகிதம்
குறைந்த ஊதியம் பெறும் தொழில்களான (சிமெண்ட், சர்க்கரை, நிதிக் குத்தகை நிறுவனங்கள்) 2014-2015 ஆண்டில் ஒற்றை இலக்கங்கள் இருந்தன, அவை கணிசமாக அதிகரித்துள்ளன, இப்போது 20 சதவீதத்தை அடைந்துள்ளன.
இருப்பினும், இந்தத் துறைகளானது மற்ற தொழில்களைக் காட்டிலும் குறைந்த கட்டணத்தில் தொடர்ந்து வரி விதிக்கப்படும். இது மட்டும் இல்லாமல் ஒரே துறையில் முரண்பாடான முறையிலும் வரி வசூலிக்கப்படும்.
வங்கி நிறுவனங்கள் மற்றும் பங்கு தரகர்கள்
வங்கி நிறுவனங்கள் 40.3 சதவீதம் வரி செலுத்தும், அதே நேரம் பங்கு தரகு நிறுவனங்கள் 25.1 சதவீதம் மட்டுமே வரி செலுத்துகின்றன.
கூறியர் முகவர் மற்றும் போக்குவரத்துத் துறை
கூறியர் முகவர்கள் 41.7 சதவீதம் வரி செலுத்துகின்றனர் ஆனால் போக்குவரத்து நிறுவனங்கள் 26.4 சதவீதம் மட்டுமே வரி செலுத்துகின்றனர்.
வன ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சுரங்க ஒப்பந்தக்காரர்கள்
வன ஒப்பந்தக்காரர் நிறுவனங்கள் 37.6 சதவீதம் வரி செலுத்தும் அதே வேலையில் சுரங்க ஒப்பந்த நிறுவனங்கள் 28.2 சதவீதம் மட்டுமே வரி செலுத்துகின்றன.
மருந்து மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள்
மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் 24.2 சதவீதமும், எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் 35.5 சதவீதமும் வரி செலுத்துகின்றன.
பாரி வள்ளல் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி
2017 ஏப்ரல் முதல் பல வரிச் சலுகைகளைக் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கியுள்ளார் அருண் ஜேட்லி.
2015-2016 நிதி ஆண்டில் மட்டும் மத்திய அரசு 76,857.7 கோடி ரூபாய் வரை நிறுவனங்களுக்கு வரி விலக்கு வழங்கியுள்ளது. இது ஒரு வரலாறு காணாத வரி விலக்கு என்று கூறலாம்.
சுங்க வரி விலக்கு
2015-2016 நிதி ஆண்டில் மட்டும் மத்திய ரசு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு 69,259* கோடி மற்றும் 79,183 கோடி ரூபாய் சுங்க வரி விலக்கு அளித்துள்ளது.
அதிகரித்து வரும் நட்டம் அடையும் நிறுவனங்கள்
2015-2016 நிதி ஆண்டு முதல் 43 சதவீத இந்திய நிறுவனங்கள் நட்டத்தைச் சந்தித்துள்ளன, 3 சதவீத நிறுவனங்கள் லாபமே இல்லாமல் இயங்கி வருகின்றன, 47.7 நிறுவனங்கள் 1 கோடி லாபம் அடைந்துள்ளன. 6 சதவீத நிறுவனங்கள் 1 கோடிக்கும் அதிகமாக லாபம் அடைந்துள்ளன.
கார்ப்ரேட் நிறுவனங்களில் அரசியல் கட்சிகளுக்கான நிதி
2014-2015 நிதி ஆண்டில் அதாவது பாராளுமன்ற தேர்தல் காலக் கட்டத்தில் 112 கோடி ரூபாய் தேர்தல் நிதியாக அரசியல் கட்சிகள் கார்ப்ரேட் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுள்ளன. இதுவே 2015-2016 நிதி ஆண்டில் 14 கோடியாகச் சரிந்துள்ளது.
நன்கொடைகள்
2014-2015 நிதி ஆண்டில் 576 கோடி ரூபாய் அரசியல் கட்சிகள் நன்கொடைகளாகப் பெற்றுள்ளன. அதுவே 2015-2016 நிதி ஆண்டில் 77.3 கோடியாகச் சரிந்துள்ளது.