இந்திய ரிசர்வ் வங்கி A உள்ளீடு எழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் புழக்கத்தில் இருக்கும் 500 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
பணமதிப்பிழப்புக்குப் பின் வெளியிடப்படப் புதிய 500 ரூபாய் நோட்டுகளைப் போலவே தான், தற்போது வெளியிடப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகளும் மகாத்மா காந்தி வரிசை ரூபாய் நோட்டுகளாக இருக்கும்.
உர்ஜித் பட்டேல்
புதிய 500 ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் அவர்களின் கையெழுத்து இடம்பெற்றிருக்கும். மேலும் இதில் 2017 என ரூபாய் நோட்டின் பின்புறத்தில் அச்சிடப்பட்டு இருக்கும்.
பணமில்லா பொருளாதாரம்
மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து நாட்டைப் பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் எனத் தொர்ந்து கொடிப்படித்து வரும் நிலையிலும், ரிசர்வ் வங்கி துணை கவர்னர் என்.எஸ்.விஸ்வநாதன் மார்ச் மாதத்தில் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்விதமான திட்டமும் இல்லை எனத் தெரிவித்தார்.
ஆச்சரியம்
இத்தகை சூழ்நிலையில் அனைத்து அறிவிப்புகளுக்கும் மாறாக ரிசர்வ் வங்கி A உள்ளீடு எழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு மக்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.
5,000 மற்றும் 10,000 ரூபாய்
சந்தையில் 5,000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியாக உள்ளது என் பறவிய வதந்திக்கு மத்திய மாநில நிதியமைச்சாரான அர்ஜூன் ராம் மெஹ்வால் நாடாளுமனறத்தில் மறுப்பு தெரிவித்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
E வரிசை..
புதிய 500 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பின்பு, நாட்டின் பணபுழக்கம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் டிசம்ப்ர் 16ஆம் தேதி ரிசர்வ் வங்கி புதிய 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. இது அனைத்தும் E என்னும் உள்ளீடு எழுத்துகொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.