எந்தப் பொருட்களை வாங்க வேண்டும், எந்த விலையில் வாங்கினால் கட்டுப்படி ஆகும் என்பது எல்லாம் ஒருவருடைய பட்ஜெட்டினை பொருத்து. ஆனால் இப்போது ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வர இருப்பதினால் வாடிக்கையாளர்களுக்குப் பல ஆச்சர்யங்கள் இருக்கக் கூடும்.
ஆம், இது வரை நாம் அதிக விலை கொடுத்து வாங்கி வந்த சில பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளதினால் விலை குறைய வாய்ப்புள்ளது. அதே நேரம் சில பொருட்கள் மற்றும் சேவை மீதான வரி அதிகரிப்பதினால் விலை கூடவும் செய்யும்.
பழம், காய் கறிகள், பருப்பு வகைகள், கோதுமை, பிரெட் மற்றும் அரிசி உள்ளிட்ட பொருட்களின் மீதான் வரி நீக்கப்பட்டுள்ளதால் விலை குறையும். ஆனால் ஒரு பக்கம் சிப்ஸ், பிஸ்கேட், பட்டர், டீ, காபி உள்ளிட்ட பொருட்கள் மீதான விலை அதிகரிக்கும்.
எனவே இங்கு எந்தச் சரக்குப் பொருட்கள் மற்றும் சேவை மீதான வரி ஏழை, நடுத்தர மக்கள் முதல் பணக்காரர்கள் வரி எப்படி எல்லாம் பாதிக்கும் என்று இங்குப் பார்ப்போம்.
கல்வி
கல்விக்கு 5,000 ரூபாய் செலவு செய்கின்றீர்கள் என்றால் அடுத்த மாதம் முதல் 5,100 ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
வீட்டுக் கடன் மீதான தவனை
வீட்டுக் கடன் பெற்றுள்ளீர்கள் என்றால் அதன் மீதான தவனம் 25,000 ரூபாய் என்றால் அது 25,750 ரூபாயாக அதிகரிக்கும்.
மொபைல் மற்றும் மின்சாரக் கட்டணம்
மின்சாரம்,, மொபைல், இணையதளம் உள்ளிட்ட பில்களின் கட்டணத்திற்குச் சேவை வரி 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படுவதால் இதன் மீதான உங்களின் சலவு அதிகரிக்கும்.
வாகன கடன்
கார், பைக் உள்ளிட்டவையினைக் கடன் வாங்கிப் பெற்று இருக்கும் போது தவனைக் கட்டணம் 5,500 ரூபாய் என்றால் 2,335 ரூபாயாகக் குறைந்து இருக்கும்.
டி, காபி உள்ளிட்ட பானங்கள்
டீ, காபி, பட்டட், பிஸ்கேட், தயிர், ஐஸ் கிரீம், இனிப்புகள் மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு இது வரை நீங்கள் 850 ரூபாய் செலவு செய்து வந்திருந்தால் அடுத்த மாதம் முதல் 808 ரூபாயாகக் குறையும்.
சோப்பு
சோப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு 500 ரூபாய் செலவு செய்து வந்திருந்தால் 440 ரூபாயாகச் செலவுகள் குறையும்.
பொழுதுபோக்கு
சினிமா, டிவி உள்ளிட்டவற்றுக்கு 2,400 ரூபாய் செலவு செய்து வந்துள்ளீர்கள் என்றால் அது 2,304 ரூபாயாகக் குறையும்.
இந்திய நிறுவனம்
ஜூலை 1
ஊழியர்கள் அதிர்ச்சி
சோகம்
9 வருடமாக சம்பள உயர்வு இல்லை.. இது ரிலையன்ஸ் உயர் அதிகாரியின் சோகம்..!