இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். இவரது பயணத்தின் போது ஜெருசலேமில் உள்ள தி கிங் டேவிட் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார். பிரெசிடெண்ட் சூட் அறைகள் உள்ள இந்த விடுதி பண்டைக்கால ஜெருசலேம் நகரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கு இவருக்குச் சிறப்பான தூக்கம் வந்து இருக்கும் என்று கூறலாம். ஏன் என்றால் இது உலகளவில் பாதுகாப்பான தங்கும் விடுதியாகும். அதே நேரம் பாதுகாப்பிற்கு ஏற்றக் கட்டணமும் வசூலிக்கப்படும். ஜெருசலேம் நகரத்தின் முக்கியச் சாலையில் சிறிது உட்புறமாக இருக்கும் இந்த விடுதிக்குச் செல்லும் வழியில் செல்லவும் பல கட்டுப்பாடுகள் உண்டு.
மூன்று வாரத்திற்கு முன்பு டிரம்ப் தங்கிய அறை
அமெரிக்க அதிபர் டிரம்ப் மூன்று வாரத்திற்கு முன்பு ஜெருசலேம் சென்ற போது இங்குத் தான் தங்கியுள்ளார். அவர் தங்கிய அதே அறை பிரதமர் மோடி அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
வடிவமைப்பு
தி கிங் டேவிட் விடுதி கட்டிடம் இடிந்து விழுந்தது போன்று வடிமைக்கப்பட்டுக் கட்டப்பட்டுள்ளது ஒரு தனிச் சிறப்பு என்றும் கூறலாம். அதே நேரம் நூற்றுக்கனகான வாடிக்கையாளர்கள் இங்குத் தங்கினாலும் பாதுகாப்பான சேவையினை அளிக்கும்.
ஏன் தி கிங் டேவிட் விடுதியில் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்?
1946 முதல் தி கிங் டேவிட் விடுதியில் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது.
ஒரு முறை தீவிரவாத சியோனிஸ்டுகள் ஹோட்டலில் தெற்கு புறம் தங்கி இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளைக் குறிவைத்து நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது விடுதி முழுவதும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்துப் பல மடங்கு பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது
மோடி வருகைக்கு முன்பு தி கிங் டேவிட் விடுதியில் என்ன நடந்தது?
இந்திய பிரதமர் மோடி அவர்கள் தி கிங் டேவிட் விடுதிக்கு வருவதற்கு முன்பு அங்கு உள்ள 110 அறைகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பின்னர் முழுமையாகப் பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்பட்ட பிறகு தங்கவைக்கப்பட்டு இருக்கிறார்.
தி கிங் டேவிட் விடுதியில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள்
விடுதியின் வெளிப்புறம் சிமெண்ட் காங்ரீட் மற்றும் ஸ்டீல் கட்டுமானத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜன்னல் எனப்படும் சாளரங்கள் அனைத்தின் கண்ணாடிகளும் குண்டுகள் துளைக்காத படி புல்லட் புரூப் மற்றும் ராக்கெட் புரூப் வசதியுடன் உள்ளது. ஏசி அமைப்பில் உள்ள வாயூக்கும் புரூப் உண்டு. இங்குப் பணிபுரியும் ஊழியர்கள் இஸ்ரேலின் ஷின் பேட் பாதுகாப்பு சேவை மூலம் கவனித்து வருகின்றனர்.
பாதுகாப்பிற்கான விலை எவ்வளவு?
சராசியாயத் தி கிங் டேவிட்டில் தங்க வேண்டும் என்றால் ஒரு இரவுக்கு 1,500 டாலர்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மொத்த விடுதியும் புக் செய்ய வேண்டும் என்றால் 165,000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ஒரு இரவுக்கு 1.07 கோடி ரூபாய்க் கட்டணமாகச் செல்த்த வேண்டும். கூடுதலான பாதுகாப்பு மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறை மற்றும் பாதுகாப்புச் சேவையைப் பெறுவதற்கான செலவு போன்ற பல உயர்தரங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
உணவு முறை
மோடி சைவ சாப்பாட்டினை மட்டுமே உண்பார் என்பதால் முட்டை, சக்கரை கூட உணவில் கலக்கப்படாத அளவிற்கு உணவுகள் மோடிக்காகத் தாரிக்கப்பட்டுள்ளது. இவரை வரவேற்கும் பூக்கள் கூட இந்தியாவைச் சார்ந்ததாக இருந்துள்ளது.
கீதா கோபிநாத்
கடுப்பான ஏர்டெல், ஐடியா
ஜியோ-வின் அடுத்த அதிரடி திட்டம்.. கடுப்பான ஏர்டெல், ஐடியா..!