இரு சக்கர வாகன கடன் முதல் மல்டி மில்லியன் டாலர் கடன் வரை அளிக்கும் நாட்டின் மிகப்பெரிய நிதியியல் சூப்பர்மார்கெட் நிறுவனத்தை உருவாக்கும் முயற்சியில் நாட்டின் இரு முக்கிய நிறுவனங்கள் இணைந்துள்ளது.
இதன் படி ஐடிஎப்சி மற்றும் ஸ்ரீராம் குரூப் நிறுவனங்கள் தங்களது நிதியியல் சேவைகள் இணைக்க முடிவு செய்துள்ளது.
மேலும் இந்த நிறுவனங்களும் பல கட்ட ஆலோசனைக்கு பின் இரு தரப்பு அடுத்த 90 நாட்களில் இரு நிறுவனங்களின் வர்த்தகமும் இணைய பணிகளை துவங்கியுள்ளது.
ஐடிஎப்சி லிமிடெட்
இரு நிறுவனங்கள் மத்தியிலான பேச்சுவார்த்தையில் ஸ்ரீராம் கேபிடல் மற்றும் ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் நிறுவனங்களின் வர்த்தகங்கள் அனைத்தும் ஐடிஎப்சி லிமிடெட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஸ்ரீராம் குழுமத்தின் போக்குவரத்து வர்த்தகம் தனியாக இயங்கும் எனவும் அதுவும் ஐடிஎப்சி லிமிடெட் நிறுவனத்தின் கீழ் தனிப்பிரிவாக இயங்கும்.
90 நாட்கள்
இந்த மாற்றங்கள் அனைத்ததும் அடுத்த 90 நாட்களில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைப்பும்.. மதிப்பு..
இந்த இணைப்பின் மூலம் சுமார் 72,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வர்ததக நிறுவனம் உருவாக உள்ளது. மேலும் இது நாட்டின் மியூச்சுவல் பண்ட் மற்றும் இன்சூரன்ஸ் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ரிசர்வ் வங்கி
இந்தியாவில் இதுபோன்ற ஒரு இணைப்பு செய்யப்பட்டத்தில்லை, அதுவும் இத்துறையில். ஆம் இரு நிறுவனங்களின் வர்த்தக சந்தை வேறு, வர்த்தகமும் வேறு, வாடிக்கையாளர்களும் வேறு, ஆனால் இது மிகப்பெரிய வெற்றி அடையும் என அனைவராலும் பேசப்படுகிறது.
மேலும் இந்த இணைப்பிற்கு ரிசர்வ் வங்கி மற்றும் செபி ஆகியவை ஒப்புதல் அளித்துள்ளது.