இந்தியாவின் மிகப் பெரிய வணிக வங்கி சேவை நிறுவனமான எஸ்பிஐ செவ்வாய்க்கிழமை எஸ்பிஐ ரியாலிட்டி என்ற வீடு வாங்குவோருக்கான பிரத்தியேகமான இணையதளம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
எஸ்பிஐ ரியாலிட்டி சேவையின் உதவியுடன் 3,000-க்கும் அதிகமான பிளாட்டுகளில் இந்தியா முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என 30 நகரங்களில் வீடு வாங்கலாம்.
உங்களுக்கு விருப்பமான வீட்டை புக் செய்யுங்கள்
எஸ்பிஐ ரியாலிட்டி சேவையில் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு விருப்பமான வீட்டை எளிமையாக வாங்க முடியும். இதற்கு www.sbireyality.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும் என்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.
மிகவும் உதவிக்கரமான இணையதளம்
தற்போது எஸ்பிஐ ரியாலிட்டி இணையதளத்தில் 9.5 லட்சம் வீடுகள் விற்பனைக்குத் தயாராக உள்ளது.
வாடிக்கையாளர்கள் அவற்றைத் தேர்வு செய்து ஒப்பிட்டு விலைகளை ஆராய்ந்து பல் நகரங்களில் தங்களுக்கு ஏற்றவாறு வீடு வாங்கலாம்.
இது எப்படி உதவும்?
வருமானத்திற்கு ஏற்றவாறு கடன் வாங்க உதவும் மற்றும் எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும் போன்ற விவரங்களைக் கணக்கிட்டுப் பார்க்கலாம்.
உங்கள் கனவு வீட்டை எளிமையாக வாங்க உதவும்
சந்தை ஆராய்ச்சி, சமகாலக் கட்டமைப்பு, வலுவான திட்ட அமலாக்கம் மற்றும் தர நிர்மாணம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நாங்கள் கொண்டுள்ளோம் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்தச் சந்தையில் நம்பகத்தன்மை மற்றும் நல்லெண்ணத்துடன் நம்பகமான திட்டங்களில் தங்கள் கனவு இல்லத்தை அடையாளம் காண்பதில் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதாக நாங்கள் நம்புகிறோம் என்று நிர்வாக இயக்குனர் ராஜ்னிஷ் குமார் கூறினார்.
உங்களுக்கான வழிகாட்டி
SBICAP செக்யூரிட்டிஸ் நிறுவனம், தரவு ஆதரவு, திட்டத் தகவல் போன்றவற்றின் அடிப்படையில் PropEquity உடன் இணைந்து எஸ்பிஐ ரியாலிட்டி தளம் உருவாக்கப்பட்டது.