இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய தனியார் வங்கி சேவையான ஆக்ஸிஸ் வங்கி எஸ்பிஐ வங்கி எப்படிச் சேமிப்பு கணக்கு மீதான வட்டி விகிதத்தினைச் சில நாட்களுக்கு முன்பு 0.50 சதவீதம் குறைத்ததோ அதே போன்று குறைத்துள்ளது.
வருடத்திற்கு 50 லட்சம் ரூபாய்க்கும் குறைவாகப் பரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கி சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் அனைவருக்கும் இந்த வட்டி விகித குறைப்பு இருக்கும்.
அதே நேரம் 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பணப் பரிவத்தனை செய்தவர்களுக்கு 4 சதவீத வட்டி விகித லப்பத்தினையே அளிக்கும். எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கியைத் தொடர்ந்து பிற வங்கிகளும் குறைக்க வாய்ப்பு உள்ளது.
எஸ்பிஐ வங்கி
இந்தியாவின் மிகப் பெரிய வங்கி சேவை அளித்து வரும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜூலை 31 வட்டி விகிதத்தினைக் குறைத்து அறிவித்தது.
எஸ்பிஐ வங்கியைப் பொருத்த வரை 1 கோடிக்கும் குறைவாகப் பணப் பரிவர்த்தனை செய்த அனைவருக்கும் 3.5 சதவீதமாகச் சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தினைக் குறைத்துள்ளது. இதுவே 1 கோடி ரூபாய்க்கும் குறைவாகப் பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தையும் அளிக்கும்.
பணவீக்கம்
பணவீக்க விகிதம் சரிவு மற்றும் உயர்ந்த உண்மையான வட்டி விகிதங்கள் ஆகியவை சேமிப்புக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் திருத்தம் செய்வதற்கான முதன்மை பரிசீலனையாகும் என எஸ்பிஐ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
யாருக்கு இந்த வட்டி விகித குறைப்பு
எஸ்பிஐ சேமிப்புக் கணக்குகளில் 90 சதவீதத்தினர் 1 கோடி ரூபாய்க்கும் குறைவாகப் பணப் பரிவர்த்தனை செய்தவர்களே ஆவார்கள்.
பாங்க் ஆ பரோடா
அன்மையில் பாங்க் ஆ பரோடா வங்கியும் 50 லட்சம் ரூபாய்க்கும் குறைவாகப் பணப் பரிவர்த்தனை செய்யும் வங்கி கணக்குகளுக்கு 3.5 சதவீதமாக வட்டி விகிதத்தினைக் குறைத்துள்ளது.