2017-18ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மொத்த லாபம் 4 மடங்கு அதிகரித்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
இந்த திடீர் லாப உயர்வுக்கு முக்கிய காரணம், டாடா ஸ்டீல் நிறுவனம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் செய்யப்பட்டிருந்த முதலீட்டை விற்பனை செய்யதன் மூலம் மிகப்பெரிய அளவிலான லாபத்தை பெற்றது.
லாபம்
ஜூன் 30 உடன் முடிந்த 2017-18ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் டாடா ஸ்டீல் நிறுவனம் சுமார் 933 கோடி ரூபாய் லாபத்தை பெற்றுள்ளது, கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் 209 கோடி ரூபாயை மட்டுமே லாபமாக பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
வருவாய்
இதேக்காலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 19 சதவீதம் உயர்ந்து 29,557 கோடி ரூபாயாக உயர்ந்து அசத்தியுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் விற்பனையும் 19 சதவீதம் வரை அதிகரித்து அசத்தியுள்ளது.
கடன் அளவு
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முதலீகள் விற்பனை செய்யப்பட்டாலும் இந்நிறுவனத்தின் கடன் அளவு 4,798 கோடி ரூபாய் அதிகரித்து மொத்த கடன் அளவு 87,812 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ரூபாய்
மேலும் ஐரோப்பிய சந்தையில் செய்யப்பட்ட வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் மூலம் அதிகளவிலான லாபம் மற்றும் வருவாயை இழந்தது குறிப்பிடத்தக்கது.