மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் ஆட்டோமேஷனால் வேலைப் போய்விடும் என்று கவலை வேண்டாம், இந்தியாவின் வளர்ச்சி பாதையில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்துள்ளது.
2016-ம் ஆண்டு உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் ஆட்டோமேஷனால் இந்தியாவில் தொடர்ந்து வேலை வாய்ப்பு குறைந்து வருவதாகவும் இது 69 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.
பெரிய பாதிப்பு இருக்காது
எனினும், மாநிலங்களுக்கான நிதி அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் இந்தியாவில் தொழில்நுட்ப ரீதியாக ஆட்டோமேஷன் சாத்தியமானாலும் பெரிய அளவில் வேலை வாய்ப்புக் குறை வாய்ப்பில்லை என்றும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்தார்.
அரசும் இந்தக் கண்ணோட்டத்தில் தான் உள்ளது என்று மாநிலங்கள் அவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சி விகிதம்
இந்திய அரசின் வளர்ச்சி விகிதம் நீண்ட காலமாக 7 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கின்றது. எனவே வேலை வாய்ப்பு அதிகரிக்கும் அதே நேரத்தில் குறைவும் செய்யும். அதனைத் தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
மோடி அரசின் முன்னுரிமை
நரேந்திர மோடி அரசாங்கத்தின் மிக முக்கியமான முன்னுரிமைகளில் முதலாவதாக வேலைவாய்ப்பு உருவாக்குவதும் ஒன்று ஆகும்.
பொருளாதார வளர்ச்சி
வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு காரணம் மற்றும் விளைவு ஆகும், இது மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது. இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக, சுமார் 20 அமைச்சகங்கள் 70 துறைகளில் திறமை மேம்பாட்டுத் திட்டங்களை நடத்துகின்றன.
வேலை வாய்ப்புத் திட்டங்கள்
மத்திய அரசு வேலை வாய்ப்பினை உருவாக்க அரசு துறை மட்டும் இல்லாமல் தனியார் துறையிலும் அதிகளவில் படிகளை எடுத்து வருகின்றது. அதில் பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம், MGNREGS, தீன் தயால் உபாதியா கிராமேன் கௌசல்யா யோஜனா, தீன் தயால் அன்யோதயா யோஜனா மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் போன்றவை என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.