மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள சுமார் 200 நிறுவனங்கள் அடுத்த 10 வருடத்திற்கு எவ்விதமான வர்த்தகமும் செய்ய முடியாத அளவிற்கு அதிரடி தடை உத்தரவை திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் இந்த 200 நிறுவனங்கள் மீதான தடை எவ்விதமான சலுகை, காலஅவகாசமும் இன்றி புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. ஏன் இந்த தடை..? எதற்காக தடை..?
காரணம்
பங்குச்சந்தையின் பாதுகாப்பு, முதலீட்டாளர்களின் வருப்பத்தை காப்பாற்றுதல், ஆகியவற்றை முக்கிய காரணியாக கொண்டு மும்பை பங்குச்சந்தை இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.
துறைகள்
இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்கள் குறிப்பிட்ட துறையை மட்டும் சார்ந்து இல்லாமல் கெமிக்கல், விவசாய உரம், பார்மா, நிதியியல், டெக்ஸ்டைஸ் என பல துறைகளை சார்ந்துள்ளது.
இந்த தடை கண்டிப்பாக மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகத்தை பாதித்தாலும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ஈர்க்க இது பெரிய அளவில் உதவும்.
3 அறிக்கை
மும்பை பங்குச்சந்தை அறிவித்துள்ளது 200 நிறுவனங்கள் மீதான தடை, 3 அறிக்கைகளாக அறிவித்துள்ளது.
முதல் அறிக்கையில் 117 நிறுவனங்கள், 2வது அறிக்கையில் 28 நிறுவனங்கள், 3வது அறிக்கையில் 55 நிறுவனங்கள் என மொத்தம் 200 நிறுவனங்களை பட்டியலிட்டுள்ளது மும்பை பங்குச்சந்தை.
முக்கிய நிறுவனங்கள்
அதேனா பைனான்சியல் சர்வீசஸ், அரிஹன்ட் இண்டஸ்ட்ரீஸ், கிரடென்ஷியல் பைனான்சிஸ், டால்பின் இன்வெஸ்ட்மென்ட்ஸ், யூப்பார்மா லெபாரட்ரீஸ் ஆகியவை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கிய நிறுவனங்களில் சில..
முழு பட்டியல்
மும்பை பங்குச்சந்தை வெளியிட்ட 200 நிறுவனங்களின் முழுமையான பட்டியல்