ஆதார் கார்டு இனி பள்ளி பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கும் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற மார்ச் மாதம் துவங்க உள்ள 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு முதல் இது அமலுக்கு வரும்.
போலி நபர்களை வைத்துத் தேர்வு எழுதுவது இதன் மூலம் தடுக்கப்படும் என்றும், தேர்வு ஆய்வுக்குழுவிடம் இதுபோன்ற மாணவர்கள் அதிகமாகச் சிக்குவதினால் இந்த முறை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஆள் மாறாட்ட மோசடி
பொதுத் தேர்வின் போது நடக்கும் ஆள் மாறாட்ட மோசடிகள் இதன் மூலம் குறைக்கப்படும் என்று மனிதவள அமைச்சகத்தின் ஒப்புதலுடன் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பையோமெட்ரிக் கருவிகள்
எனவே வரும் பொதுத் தேர்வுகள் முதல் தேர்வு நிலையங்களில் கை விரல் ரேகை ஸ்கானர், கண் ஸ்கேனார் உள்ளிட்டவற்றை அமைக்க உள்ளது.
கைவிரல் ரேகை
மாணவர்களின் கைவிரல் ரேகை ஒத்துப்போனால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று விவரம் அறிந்த அதிகாரிகள் கூறினர்.
சிசிடிவி
மேலும் சிசிடிவி இல்லாத பள்ளிகளுக்குப் பொதுத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.