பிரதமர் நரேந்திர மோடி ஞயிற்றுக்கிழமை சிறு வணிகர்கள், காய் கறி விற்பவர்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர்கள் போன்றவர்களிடம் சிறு தொகைக்காகப் பேரம் பேசாதீர்கள் என்று மக்களிடம் தெரிவித்துள்ளார்.
உணவகம் சென்று சாப்பிடுகின்றோம், தரம் குறைவாக இருந்தாலும் பணம் செலுத்துகின்றோம்.
புடவை வாங்குதல்
இது மட்டும் இல்லை புடவை வாங்க ஷோ ரூம் செல்கின்றோம், ஆனால் அங்குப் பேரம் பேசுவதில்லை. இதுவே வீடு வீடாக வந்து விற்பனை செய்பவர்களிடம் பேரம் பேசுகின்றோம். எனவே ஏழை வியாபாரிகளிடம் பேரம் பேசாதீர்கள் என்று மண் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் மோடி கூறினார்.
கடின உழைப்பு
தங்களது கடின உழைப்பினால் தொழில் செய்து வரும் காய் கறி விற்பனையாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களிடம் மக்கள் பேரம் பேசுகின்றனர்.
பேரம் பேசும் பணத்தில் என்ன செய்துவிடப் போகிறீர்கள்?
இரண்டு ரூபாய் ஐந்து ரூபாய்க்காகப் பேரம் பேசி பெரிய மாற்றத்தினை உருவாக்கி விடப் போவதில்லை, ஆனால் இது எந்த அளவுக்கு ஏழைகளைப் புண்படுத்தும் என்று கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.
நேர்மையினைக் கேள்வி கேட்டால் என்ன ஆகும்?
அந்த ஏழை வியாபாரி எண்ணத்தைக் கொண்டு சென்று விடப் போகின்றான் என்று நினைத்துப் பாருங்கள், மேலும் ஒரு ஏழையிடம் அவனது நேர்மையினைக் கேள்வி கேட்கும் போது அவன் துவண்டுப்போவான், அது அவர்களை மனதளவில், பொருளாதார அளவில் புண்படுத்தும் என்று எல்லாம் கூறினார்.
வீடியோ
2017 ஆகஸ்ட் 27-ம் தேதி பேசிய முழு உறை வீடியோ!