வரி செலுத்துனர்களுக்கு ஒர் நறிசெய்தி, வருமான வரித் துறை பான் ஆதார் கார்டு இணைப்பிற்கான காலக்கெடுவை மேலும் 4 மாதங்கள் நீட்டித்து டிசம்பர் 31-க்குள் செய்ய வேண்டும் அறிவித்துள்ளது
முன்பு மத்திய அரசு ஆதார் பான் இணைப்பினை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் செய்ய வேண்டும் என்று அறிவித்து இருந்தது. அதனால் இணைப்பைச் செய்யாமல் வரி தாக்கல் செய்பவர்களுக்குச் சிக்கல் எழுந்தது.
இணைக்காததால் இருந்த சிக்கல்
இணைப்பை செய்யாமல் வருமான வரி தாக்கல் செய்து இருந்தால் அது செல்லாது ஆகிவிடும் என்றும், வரி தாக்கல் செய்ததாகக் கருதப்படாது என்றும் கூறப்பட்டது.
எதனால் இந்தக் காலக்கெடு நீட்டிப்பு
ஆதார், பான் கார்டுகளில் பெயர், இனிஷியல் உள்ளிட்ட விவரங்கள் ஒன்றாக இல்லாததால் பலரால் இணைப்பினை செய்து வரி தாக்கல் செய்ய முடியவில்லை. இது குறித்து வருமான வரித் துறைக்குப் பல புகார்கள் வந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தனிநபர் வருமானம்
தனிநபர் ஒருவரின் மாத வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருப்பவர்கள் வருமான வரி தாக்கல் செய்யத் தேவையில்லை என்பதால் ஆதார், பான் இணைப்பு தேவையில்லை.
இவர்களுக்கு இணைப்பு தேவையில்லை
மேலும் என்ஆர்ஐ, வெளிநாட்டவர்கள், 80 வயது ஆன மூத்த குடிமக்கள், அசாம், மேகாலயா மற்றும் ஜம்மு காஷ்மிர் மாநிலத்தவர்கள் ஆதார், பான் இணைப்பினை செய்ய வேண்டியதில்லை.