இந்திய அரசு திங்கட்கிழமை முதல் மியான்மாருக்குப் பெட்ரோலியம் பொருட்களைச் சாலை வழியாக ஏற்றுமதி செய்யத் துவங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் எண்ணெய் சுத்திகரிப்பு துறைக்குப் புதிய சந்தைகள் கிடைத்துள்ளன.
அதே நேரம் இந்தியாவில் புதுமையான எரிப்போருள் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட ஆற்றலினை பயன்படுத்துவது அதிகரித்து வருகின்றது.
முதல் லோடு
முதல் லோடாக இந்தியாவில் இருந்து 30 டன் அதி வேக டீசலினை திங்கட்கிழமை மியான்மாருக்கு சாலை வழியாக அனுப்பப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எந்த வழியாகக் கொண்டு செல்லப்படுகின்றது
நமலிகர் சுத்திகரிப்பு இந்தியாவின் மொரே கான்ட் செக் பாயிண்ட் வழியாக மியான்மாரின் டூமு செக் பாயிண்ட் மார்க்கமாக முதல் டீசல் சரக்குகளை அனுப்பியது.
ஏற்றுமதிச் செய்யப்படும் பிற நாடுகள்
இந்திய அரசுக்குச் சொந்தமான நமலிகர் எண்ணெய் சுத்திகரிப்பு மையம் ஏற்கனவே இங்கு இருந்து வங்க தேசத்திற்கும், நேபாளுக்கும் டீசல் பொருட்களை விநியோகித்து வருகின்றது.
பராமை எரிசக்தி குழுமத்துடன் இணைந்து செயல்பாடு
நமலிகர் எண்ணெய் சுத்திகரிப்பு மையம் இந்தியாவில் இருந்து 420 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மியான்மாருக்கு அந்த நாட்டின் பராமை எரிசக்தி குழும நிறுவனத்துடன் இணைந்து டீசல் ஏற்றுமதியைத் துவங்கியுள்ளது.
மியான்மார் சந்தை
இந்தியாவில் இருந்து 2016-2017 நிதி ஆண்டில் 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதிக்கு மியான்மார் சந்தை இருந்து வந்தது. தற்போது இதுவே 12.61 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் சுத்திகரிப்பு நிலையங்களின் வளர்ச்சி
இந்தியாவில் தற்போது 230 மில்லியன் டன் அளவிற்கு உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மையத்தில் கூடுதலாகாக 7 சதவீதம் வரை வளர்ச்சி விரிவடைந்து உள்ளது.
அதுமட்டும் இல்லாமல் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூடுதலாக 60 மில்லியன் டன் வரை சுத்திகரிப்புச் செய்யக் கூடிய அளவிலான மையம் ஒன்றை 2022-ம் ஆண்டுக்குள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
புதிய சந்தையின் தேவை
இதுபோன்ற புதிய விரிவாக்கங்களால் டீசலின் பயன்பாடு மின்சாரம் உற்பத்தி மட்டும் இல்லாமல் புதிய சந்தையைத் தேடும் நிலையை அடைந்துள்ளது.
மோடியின் திட்டம்
மியான்மாருக்கு டீசல் ஏற்றுமதியைச் சாலை வழியாகச் செய்வது என்பது பிரதமர் மோடி அவர்களின் அண்டை நாடுகளுக்கு ஹைடிரோ கார்பன் வழங்குதல் மற்றும் கிழக்கு வணிகக் கொள்கை சட்டத்தினை ஊக்குவிப்பதன் ஒரு படி என்று எண்ணெய் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒப்பந்தங்கள்
எண்ணெய் அமைச்சகம் தர்மதேந்திர பிரதான் இந்த ஆண்டுப் பிப்ரவரியில் மியான்மாருக்கு சென்று வந்துள்ளார். அதன்படி மியான்மாருடன் இணைந்து எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் ஒத்துழைப்தற்கான ஆய்வு செய்யப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் சில்லறை விற்பனை, சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ஹைட்ரோகார்பன்களை ஆய்வு செய்வதில் பங்கு பெறுவது போன்றவற்றுக்கு ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.