பிரதான் மந்திரி வாயா வந்தனா யோஜனா திட்டம் என்பது மூத்த குடிமக்களுக்காக மத்திய அரசால் எல்ஐசி மூலம் வழங்கப்படும் ஓய்வூதிய திட்டமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு மாதாந்திர முறையில் 8 சதவீத லாபமும், வருடாந்திர முதலீட்டு முறையில் 8.3 சதவீதம் வரையிலும் லாபம் அளிக்கப்படும்.
எனவே இங்குப் பிரதான் மந்திரி வாயா வந்தனா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யும் போது உள்ள நன்மைகளை இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.
ஓய்வூதியம் வழங்கப்படும் முறை
ஓய்வூதியம் முதலீட்டு முறையினைப் பொருத்து நான்கு வகைகளாக வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம், ஒவ்வொரு காலாண்டிலும், ஒவ்வொரு அரையாண்டிலும், ஆண்டுக்கு ஒரு முறை என வழங்கப்படும். இதனை முதலீட்டாளர்கள் தேர்வு செய்வார்கள்
கடன்
கடன் வசதி முதலீடு செய்யத் துவங்கியதில் இருந்து 3 வருடங்களுக்குப் பிறகு வழங்கப்படும். முதலீடு செய்ததில் இருந்து 75 சதவீதம் வரை கடனாகப் பெற முடியும். 2016-2017 நிதி ஆண்டில் வருடத்திற்கு 10 சதவீதம் வட்டி விகிதம் கட்டணமாக வழங்கப்படும்.
வங்கி கணக்கில் ஓய்வூதியம் வழங்கப்படும்
ஓய்வூதிய பணம் என்ஈஎப்டி அல்லது ஆதார் பணப் பரிவர்த்தனையின் கீழ் நேரடியாக ஓய்வூதியதாருக்கு வழங்கப்படும்.
முதிர்வு நன்மைகள்
பிரதான் மந்திரி வாயா வந்தனா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 10 வருடங்களுக்குப் பிறகு முதிர்வு தொகை வழங்கப்படும். ஒரு வேலை பால்சி காலத்தில் முதலீட்டார் இறக்க நேர்ந்தால் நாமினிகளுக்கு முதிர்வு தொகை வழங்கப்படும்.
குறந்தபட்ச்ச வயது மற்றும் பணம்
பிரதான் மந்திரி வாயா வந்தனா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யக் குறைந்தபட்ச வயது 60 ஆகும். அதிகபட்ச வயது வரம்பு ஏதும் இல்லை. ஆனால் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச முதலீடு என்ற வரம்புகள் உண்டு. குறைந்தபட்ச ஓய்வூதியம் 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை ஒவ்வொரு மாதமும் பெற முடியும்.
முதிர்வுக்கு முன்பு வெளியேறுதல்
பாலிசி முதிர்வுக்கு முன்பு முதலீட்டாளர் அல்லது அவரைச் சார்ந்தவர்களுக்கு உடல் நலக் குறைவு அல்லது கடினமான சிக்கல் என்ற போது முதலீட்டுத் தொகையில் 98 சதவீதம் வரை வழங்கப்படும்.