பிட்காய்ன் காட்சிக்கு வந்தது முதல் இதர பல இணைய நாணயங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த இதர பலவற்றில் எதீரியம் நிதிச் சந்தையைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் கரன்சிகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருவாயைத் தந்து வருவதால், நாட்டின் நிதியியல் ஒருங்கமைப்பாளர்கள் இதைச் சட்டப்பூர்வமாக்கும் நாள் எதிர்காலத்தில் வெகு தொலைவில் இல்லை. எனவே, இதைப் பற்றி அறிந்து கொள்வது புத்திசாலித்தனமானதாகும்.
எனவே, நீங்கள் எதீரியம் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் ஒரு முயற்சியாக இங்கே சில தகவல்கள் கொடுத்துள்ளோம்.
பிட் காயினுக்குப் போட்டி
நிதியியலை நீங்கள் இப்பொழுது தான் கற்றுக் கொள்கிறீர்கள் மற்றும் நீங்கள் பணக்காரராக விரும்புகிறீர்கள் என்றால், பிட்காய்ன் கரன்சியைத் தவிர இரண்டாவது மிகப் பிரபலமான இணைய நாணயமான எதீரியம் விரைவாகக் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இது அளிக்கும் கூடுதல் அனுகூலங்களின் காரணத்தினால், ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் எதிர்பார்த்தபடி எதீரியத்தின் செயல்திறன் பிட்காய்னை விட அதிகரிக்கும் வாய்ப்புக்கள் அதிகம்.
எதீரியம் எப்படிப் பிட்காய்ன்களை விட அதிக மதிப்பெண் பெறுகிறது?
பிட்காய்னில் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபர் வழியாக அனுப்பும் மதிப்பை விட அதிகமான மதிப்பை வழங்கும் ஒரு தளத்தை எதீரியம் கிரிப்டோகரன்சி வழங்குகின்றது. இருந்தாலும் கூட, வான்னாக்ரை ரேன்சம்வேர் குற்றவாளிகள் பிட்காய்னில் பிணையத் தொகையாகப் பெரும்பணத்தைக் கேட்ட போது, ஒரே நேரத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமாக அதிகரித்து, மதிப்பின் அடிப்படையில் பிட்காய்ன் 1.65 இலட்சத்தைக் கடந்து விட்டது.
இந்தக் கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்திப் பணம் எவ்வாறு நாணயமாக்கப்படுகிறது?
இந்தியாவில் க்ரிப்டோகரன்சிக்களைச் சட்டப்பூர்வமாக்குவதைப் பற்றிப் பரிசீலனையில் இருந்தாலும், நீங்கள் இந்த நாணயங்களை டிஜிட்டல் வாலெட்டுகள் அல்லது இந்த நோக்கத்திற்காகப் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருக்கும் பரிமாற்றகங்களின் வழியாகப் பரிமாற்றுக் கொள்ளலாம் அல்லது வாங்கலாம்.
நீங்கள் இந்தியாவில் பிட்காய்ன் வாங்குவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்?
ஆனால் அதே நேரத்தில், இப்போது வரை அவர்களின் விற்பனைத் தளமாக நாணயங்களைக் குவித்து வைத்தல் மட்டுமே இருப்பதால், பணத்தை அதில் சேகரித்து வைக்க மட்டுமே முடியும், அவற்றை நீங்கள் இதர நாணயங்களுடன் பரிமாறிக் கொள்ளலாம் ஆனால் பண வடிவில் மீட்டெடுக்க முடியாது. நீங்கள் சட்டத்திற்கு எதிராக வேலை பார்ப்பீர்கள் என்பதால் அந்த ஒதுக்கீடு இதில் இல்லை, அதே சமயத்தில் இது வரித் துறையின் கூர்ந்த ஆய்வின் கீழ் வரும்.