லார்சன் & டூப்ரோ நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் 2,528 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதம் தயாரிப்புக்கு அனுமதி பெற்றுள்ளதாகக் கூறியுள்ளது.
பொறியியல் மற்றும் கட்டுமான தொழிலைக் கவனித்து வரும் எல்&டி நிறுவனத்திற்கு இந்த 2,528 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதம் தயாரிப்பு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் நேற்று பங்குகள் விலை நன்றாக உயர்ந்து காணப்பட்டது.
ஆயுத உற்பத்திக்கான ஒப்பந்தம் மட்டும் இல்லாமல் உலோகம் மற்றும் பொருட்கள் பிரிவில் 2,271 கொடி ரூபாய்க்கான ஆர்டர்களையும் பெற்று இருந்தது. இவை மட்டும் இல்லாமல் லார்சன் & டூப்ரோ நிறுவனம் 254 கோடி ரூபாய் மதிப்பிலான பிற வணிகங்களுக்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்புகளை எல்லாம் நேற்று வெளியிட்ட உடன் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் பங்குகளின் விலை நேற்று உயர்ந்து இருந்தது. அதுவே இன்று சரிந்து காணப்படுகின்றது.