அன்மையில் இந்திய பங்கு சந்தை மாலை 5:30 மணி வரை செயல்படும் என்று அன்மையில் செய்திகள் வெளியாகி வந்தன.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து இந்தியாவில் பங்கு சந்தைக் காலை 9:15 முதல் மாலை 3.30 மணி வரையில் தான் இயங்கும் என்றும் அதில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை என்றும் மும்பை பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஆஷிஷ்குமார் சவுகான் கூறியுள்ளார்.
அறிவிப்பு
ஜூலை மாதம், இந்தியாவின் மெட்ரோபொலிட்டன் பங்கு பரிவர்த்தனை மையம் (MSEI) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வர்த்தக நேரத்தினை மாற்ற இருப்பதாக அறிவித்தது.
திரும்பப் பெற்றது
ஆனால் வர்த்தக நேரத்தினை 5 மணி வரை மாற்றி அமைப்பதாக அறிவித்த ஒரே நாளில் அதனைத் திரும்பப் பெற்றது.
செபி அனுமதி
2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பங்கு சந்தையின் வர்த்தக நேரத்தினைக் காலை 9 முதல் 5 மணி வரை மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என்று செபி அனுமதி அளித்தது.
என்எஸ்ஈ மற்றும் பிஎஸ்ஈ
மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை இரண்டும் 2009-ம் ஆண்டுக் காலை 9.45 மணிக்குத் துவங்கி வந்த பங்கு சந்தையினை 9 மணிக்கே துவங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.