மத்திய அரசு இந்தியாவில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு புதிய அறிவிப்பை வெளியிட உள்ளது.
இதில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் முதலில் பதிவு செய்ய வேண்டும். இதோடு அவர்கள் மிட்டாய், கூல்டிரிங்ஸ் போன்றவற்றை விற்பனை செய்யக்கூடாது எனப் புதிய வரைவு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.
செப்டம்பர் 21
மத்திய சுகாதாரத்துறை செப்டம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், மாநில அரசுகள் புகையிலை பொருட்களான சிகரெட், பீடி, குட்கா மற்றும் கைனி ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகளுக்கு அனுமதிகள் வழங்கும் உரிமை நகராட்சி அமைப்புகளிடம் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
கண்காணிப்பு
இதன் மூலம் இந்தியாவில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் கடைகளும் நகராட்சி அமைப்பின் கட்டுப்பாட்டிற்குள் வருவது மட்டும் அல்லாமல் அனைத்துக் கடைகளையும் முழுமையாகக் கண்காணிக்க முடியும் எனப் பொருளாதார ஆலோசகரான அருண் ஜா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு
இதன் மூலம் குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் புகையிலை பயன்பாட்டை அதிகளவில் குறைக்க முடியும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
பிற பொருட்கள்
இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாகவே புகையிலை பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள மத்திய அரசு. புகையில் விற்பனை செய்ய அனுமதி பெறும் கடைகள் மிட்டாய்கள், சிப்ஸ், பிஸ்கெட், கூல்டிரிங்ஸ் போன்றவற்றை விற்பனை செய்யக்கூடாது என்ற விதிமுறையும் கொண்டு வர உள்ளதாக அருண் ஜா தெரிவித்தார்.
இதன் மூலம் புகையிலை பயன்பாட்டுத்தாக மக்களை இக்கடைகளில் இருந்து விலக்கிவைக்க முடியும் என அவர் கூறினார்.
120 கோடி மக்கள்
இந்தியாவில் 5இல் ஒருவர் அதாவது கிட்டத்தட்ட 120 கோடி மக்கள் புகையிலை பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர் என்று அரசு ஆய்வு கூறுகிறது.
மேலும் இந்தியாவில் புகையிலை பொருட்களைப் பயன்படுத்தும் மக்களின் குறைந்தபட்ச வயது 16ஆக உள்ளது.
மரணம்..
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 1 கோடி பேர் புகையிலையினால் ஏற்படும் நோய்கள் மூலம் மரணத்தைச் சந்திக்கின்றனர்.