வோக்ஸ்வாகன் நிர்வாகத்தில் இயங்கி வரும் டுக்காட்டி என்னும் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனத்தை விற்பனை செய்யும் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது வோக்ஸ்வாகன்.
டுக்காட்டி நிறுவனத்தை வாங்க ஆசியாவில் இருந்து எய்ச்சர் மோட்டார்ஸ் தலைமையிலான ராய்ல் என்பீல்டு, உட்பட ஹார்லி சேவிட்சன் போன்ற முன்னணி நிறுவனங்கள் பல இதனை வாங்க போட்டிபோட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வோக்ஸ்வாகன் மேற்பார்வை குழு நிறுவனத்தை விற்பனை செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளதாக டுக்காட்டி சிஇஓ ப்ரூனோ பபிகானி தெரிவித்துள்ளார்.
வோக்ஸ்வாகன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆடி நிறுவனமே டுக்காட்டி வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் விற்பனையினால் வோக்ஸ்வாகன் நிர்வாகத்திற்கு 1.8 பில்லியன் டாலர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிர்வாகத்தின் முடிவினால் இதன் விற்பனை தற்போது முடங்கியது.