உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக விளங்கிய இந்தியா இந்த தகுதியை சீனாவிடம் இழந்து நிற்கிறது.
இத்தகைய சூழ்நிலைக்கு மத்திய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கமே முக்கிய காரணம் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இத்திட்டங்களால் 2015ஆம் ஆண்டில் 8.6 சதவீதமாக இருந்த இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி, 2017ஆம் ஆண்டில் 7 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்நிலையில் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக இந்திய அரசும் அதிகளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், 2018ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.3 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என உலக வங்கி, தென் ஆசிய பொருளாதார கண்காணிப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகிய நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தின் நிலையை வளர்ச்சிக்கு வித்திட்டால், இந்தியாவில் வறுமை அதிகளவில் ஒழிக்கப்படும். இதுமட்டும் அல்லாமல் வகைப்படுத்தாத துறை மற்றும் வர்த்தகம் கணக்கில் கொண்டு வரப்படும் என சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி நடத்திய வருடாந்திர கூட்டத்தில் தெரிவித்துள்ளது.