தீபாவளி பண்டிகையின் முன்னணி உள்நாட்டு முதலீட்டாளர்கள் இன்று அதிகளவில் முதலீடு செய்தனர், இதனுடன் செப்டம்வர் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் உயர்வடைந்ததை அடுத்து பன்னாட்டு முதலீட்டாளர்களும் இந்திய சந்தையில் முதலீடு செய்தனர்.
இதன் மூலம் இன்று மெட்டல், பார்மா மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் அதிகளவிலான முதலீட்டைக் குவிந்தது. இதனால் இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு 10,200 புள்ளிகளைத் தாண்டி புதிய உச்சத்தை அடைந்தது.
தொடர் முதலீடு
இன்றைய வர்த்தகத்தில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், முதலீட்டு அளவில் தொடர் உயர்வு காணப்பட்டதால், வர்த்தக முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் காணப்பட்டது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
திங்கட்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 200.95 புள்ளிகள் உயர்வில் 32,633.64 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 63.40 புள்ளிகள் உயர்ந்து 10,230.85 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
லாபமடைந்த நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையின் எஸ் அண்ட் பி குறியீட்டில் இருக்கும் 30 நிறுவனங்களில் இன்று பார்தி ஏர்டெல் அதிகப்படியாக 4 சதவீதம் வரை உயர்ந்து 453 ரூபாய் வரை உயர்ந்தது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 3.08 சதவீதம் வரை உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்வித்தது. இதைத் தொடர்ந்து டாடா மோட்டாஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், சன் பார்மா, சிப்லா, டாக்டர் ரெட்டி ஆகிய நிறுவனங்களில் அதிகளவிலான வளர்ச்சியைச் சந்தித்தது.
நஷ்டமடைந்த நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் ஆக்சிஸ் வங்கி 1.65 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதைத் தொடர்ந்து விப்ரோ, மாருதி, என்டிபிசி, அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளது.