மொபைல் நெட்வோர்க் சேவையில் இணைவை அறிவித்த சில நாட்களில் டாடா குழுமமும், பார்தி எண்டெர்பிரைசஸ் நிறுவனமும் டிடிஎச் சேவை வணிகத்திலும் இணையப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
டாடா டெலிசர்வீசஸ் 31,000 கோடி ரூபாய் கடனில் இருந்தாலும், ஏர்டெல் இந்நிறுவனம் வைத்துள்ள ஸ்பெக்ட்ரத்திற்கான நிலுவை தொகை மட்டும் கொடுத்து மொத்த வர்த்தகத்தையும் பெற்றுள்ளது. இதனால் ஏர்டெல் நிறுவனத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை. அடுத்து டிடிஎச் சேவையிலும் இணைந்தால் இது மிகப் பெரிய இணைவாக இருக்கும்.
இரண்டு மாதம்
ஏர்டெல் டிடிச் மற்றும் டாடா ஸ்கை நிறுவனம் இரண்டு இணைவதற்கான பணிகளைச் செய்து வருகின்றன. இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை குறைந்தபட்சம் இரண்டு மாதத்தில் முடிந்து இணையும் என்றும் கூறப்படுகின்றது.
டிடிஎச் சேவையில் மிகப் பெரிய இணைவு
இந்த ஒப்பந்தம் முடிந்தால், இந்திய டிடிஎ சேவையில் 44 சதவீத சந்தையுடன் மிகப் பெரிய மிகப் பெரிய இணைவாக இருக்கும். டாடா ஸ்கை மற்றும் ஏர்டெல் டிடிஎச் ஆகியவை முறையே 23% மற்றும் 21% சந்தைப் பங்கு வகிக்கின்றன.
டிடிஎச் வணிகம்
இந்தியாவின் டிடிஎ சேவையினைப் பொறுத்தவரையில் 61.2 மில்லியன் சந்தாதார்கள் உள்ளனர், அதில் டிஷ் டிவி நிறுவனத்திடம் மட்டும் 25 சதவீத சந்தை மதிப்பு உள்ளது.
டாடா குழுமம்
டாடா குழுமம் இது குறித்துப் பதில் அளிக்க மருத்துள்ள நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் இரண்டு நிறுவனங்களும் மொபைல் சேவையில் இணைவது மட்டும் இல்லாமல் பிற சேவைகள் குறித்தும் விவாதிக்க முடிவு செய்துள்ளது என்பதைத் தெரித்துள்ளது.
ஏர்டெல்
எனினும் பிற சேவைகளில் இரண்டு நிறுவனமும் இணைவது குறித்த தற்போதைக்கு திட்டம் ஏதும் இல்லை என்றும் ஏர்டெல் நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.