இந்திய வங்கிகளில் தற்போது வராக்கடன் அதிகரித்துள்ளது நிலையில் நாட்டின் வளர்ச்சிக்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகம், இந்திய பொதுத்துறை வங்கிகளில் சுமார் 2.11 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை உள்ளீடு செய்ய முடிவு செய்துள்ளது.
ரூ.1.35 லட்சம் கோடி
அடுத்த 2 வருடத்தில் பொதுத்துறை வங்கிகள் மறுமூலதன பத்திரங்கள் மூலம் 1.35 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி தெரிவித்தார்.
அரவிந்த் சுப்பிரமணியன்
இந்தப் பத்திரங்கள் தனியார் நிறுவனங்கள் வெளியிடுகிறதா அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் வெளியிடுகிறதா என்பதை இன்னும் முடிவு செய்யப்படவில்லை என மத்திய அரசின் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பத்திர வடிவம்
மேலும் இந்தப் பத்திரத்தின் முதிர்ச்சி காலம், வட்டி விகிதம், அவை எப்படிச் செயல்படப்போகிறது என்பது குறித்து எவ்விதமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை.
பட்ஜெட் நிதி ஒதுக்கீடு
2.11 லட்சம் கோடி ரூபாய் நிதி உள்ளீட்டில் 1.35 லட்சம் கோடி ரூபாய் பத்திரங்கள் வாயிலாகவும், மீதமுள்ள 76,000 கோடி ரூபாயை பட்ஜெட் நிதி ஒதுக்கீடு மூலம் உள்ளீடு டெய்யப்படும் என அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
வங்கிகள் அறிவுரை
மேலும் அடுத்த இரண்டு வருடத்தில் வங்கிகள் மக்கள் திட்டத்திற்காக அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் அருண் ஜேட்லி அறிவுறுத்தியுள்ளார்.