டெல்லி: தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்கர் மத்திய அரசு வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக மத்திய அரசு புதிய அவன்யூ களை உருவாக்க முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்.
முத்ரா யோஜனா மற்றும் நெடுஞ்சாலை துறை கட்டமைப்புகள் மற்றும் இதுபோன்ற புற் திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதில் மத்திய கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.
வருங்கால வைப்பு நிதி ஆணையம்
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் 65வது ஆண்டு விழாவை கொண்டாடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சுய தொழில் மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை உறுவாக்க மத்திய அரசு நேர்மையுடன் செயல்பட்டு வருகிறது என்றார்.
நெடுஞ்சாலை திட்டம்
மத்திய அரசு 5 வருடத்தில் 83,000 கிமி சாலைகளை நெடுஞ்சாலைகளில் அமைக்க முடிவு செய்துள்ளது, இதனால் 32 கோடி நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறினார்.
சுய தொழில்
சுய தொழில் துவங்க மட்டும் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 9.5 கோடி நபர்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் கடன் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஈபிஎப் கணக்குகள்
1952-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் மிகப் பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது என்றார். கடந்த 65 ஆண்டில் 5.5 லட்சம் நபர்கள் பல அடைந்துள்ளதாகவும், தற்போது 4.5 கொடி ஊழியர்கள் கணக்கை நிர்வகித்து வருகிறார்கள் என்றும் கூறினார்.
இணையதளப் பிஎப் சேவை
இணையதளம் மூலம் ஊழியர்களைப் பதிவு செய்வது, பிஎப் கணக்கை நிர்வகிப்பது, பணத்தைத் திரும்பிப் பெறுவதற்கான கோரிக்கையினைப் பெறுவது எனச் சேவைகளை எளிமைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.