இந்தியாவின் அஷோக் லைலாண்டு நிறுவனம் இரண்டாம் காலாண்டு அறிக்கையினைப் புதன் கிழமை வெளியிட்டது. காலாண்டு அறிக்கையின் போது லாபம் உயர்ந்து இருந்தாலும் எதிர்பார்த்த அளவினை எட்டவில்லை என்று கூறியுள்ளது.
செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிந்த இரண்டாம் காலாண்டில் சென்ற ஆண்டுப் பெற்ற 2.94 பில்லியன் டாலர் லாபத்தினை விட 14 சதவீதம் உயர்ந்து 3.34 பில்லியன் டாலர் லாபத்தினைப் பெற்றுள்ளது.
வருவாயினைப் பொறுத்தவரையில் 23 சதவீதம் உயர்ந்து 60.47 பில்லியன் டாலரினை பெற்றுள்ளது.
இரண்டாம் காலாண்டில் ஏற்றுமதியில் 39 சதவீத வளர்ச்சியினைப் பெற்றுள்ளதாகவும், இலகு ரக வாகன விற்பனை 18 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் அஷோக் லைலாண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்குச் சந்தையில் நேற்று முதல் கடும் சரிவைச் சந்தித்து வரும் அசோக் லைலாண்டு நிறுவனப் பங்குகள் இன்று 3.40 சதவீதம் சரிந்து 117.85 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.