டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வியாழக்கிழமை காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. அதில் மூன்று மடங்கு கூடுதல் லாபம் அடைந்துள்ளதாகவும், ஆடம்பர கார் பிரிவில் அதிக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் சென்ற ஆண்டுப் பெற்ற 8.28 பில்லியன் ரூபாய் லாபத்தினை டாடா மோட்டார்ஸ் பெற்று இருந்தது. நடப்பு ஆண்டில் 24.83 பில்லியன் ரூபாய் நிகர லாபத்தினைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
வல்லுநர்கள் 14.99 பில்லியன் ரூபாய் நிகர லாபம் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மூன்று மடங்கு அதிகமாக டாடா மோட்டார்ஸ் பெற்றுள்ளது.
இரண்டாம் காலாண்டு செயல்பாடுகளில் மட்டும் 9 சதவீதம் என 701.56 பில்லியன் ரூபாயினைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.