இந்தியாவில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ள காரணத்தால் ஆக்டோபர் மாதத்தில் நாட்டின் நுகர்வோர் பணவீக்கம் 3.58 சதவீதமாக அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்லி இதன் அளவு 3.28 சதவீதமாக மட்டுமே இருந்த நிலையில் தற்போது கணிப்புகளையும் தாண்டி அதிகளவில் அளவை பதிவு செய்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் 3.28 சதவீதமாக இருந்த நுகர்வோர் பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 3.46 சதவீதம் அளவில் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சந்தையில் உணவு பொருட்களின் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் இதன் அளவு 3.58 சதவீதத்தை அடைந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் இதன் அளவு 4.20 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் காலத்தில் உணவு பொருட்கள் மீதான பணவீக்கம் 1.90 சதவீதமாக உயர்ந்துள்ளது. செப்டம்பரில் இது 1.25 சதவீதமாக மட்டுமே இருந்தது.
மேலும் முட்டை -0.69% பணவீக்கமும், காய்கறிகள் 7.47% பணவீக்கமும், தாணியங்கள் -23.13% பணவீக்கமும், மசாலா பொருட்கள் -2.15% பணவீக்கமும் நிலவுகிறது. அதனைத் தாண்டி உணவு மற்றும் பானங்கள் 2.26%, பான், புகையிலை 6.91%, ஆடை மற்றும் காலனி 4.76%, வீட்டு மற்றும் வீட்டு மனை 6.68%, எரிவாயு மற்றும் மின்சாரம் 6.39 சதவீத பணவீக்கத்தை அக்டோபர் மாதத்தில் பதிவு செய்துள்ளது.