மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிக்கையான 7வது சம்பள கமிஷன் தாக்கல் செய்யப்பட்டுப் பல மாதங்கள் ஆகியும் இன்னமும் புதிய சம்பள உயர்வு அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது புதிய சம்பளம் ஜனவரி மாதம் கிடைக்கும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதம் தான் கிடைக்கும் என அரசுதரப்புத் தகவல்கள் கூறுகிறது.
இப்படி மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பளத்தைக் காலம்கடத்தும் காரணத்தால் மத்திய அரசுக்கு சுமார் 26,000 கோடி ரூபாய் மிச்சப்படுத்துகிறது. இதன் காரணமாக எவ்விதமான முக்கியக் காரணமும் இல்லாமல் அரசு புதிய சம்பளத்தை அளிப்பதை காலம் கடத்துகிறது.
தோராயமாக ஒரு ஊழியருக்குச் சராசரியாக 3,000 ரூபாய் சம்பள உயர்வு என வைத்துக்கொண்டால் கூட 48 லட்ச மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத காலதாமத்தின் மூலம் மத்திய அரசு சுமார் 26,000 கோடி ரூபாய் செலவை குறைத்துப் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.