சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் இந்தியாவில் தங்கம் மற்றும் தங்க நகை வியாபாரம் பெரிய அளவில் குறைந்ததாக தெரியவில்லை. இந்தியாவில் மஞ்சல் உலோகமான தங்கத்திற்கு தேவை அதிகமாக இருக்கும் காரணத்தால் நாட்டிற்குள் தங்க அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது.
தங்கம் கடத்துபவர்கள் பொதுவாக வளைகுடா வழித்தடத்திலேயே அதிகளவில் கடத்தி வந்த நிலையில் தற்போது ஐரோப்பிய வழிகளிலும் தங்கம் கடத்தல் அதிகரித்து காணப்படுவதாக இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் தங்கம் கடத்துபவர்கள் தற்போது அதிகளவில் ஐரோப்பிய வழித்தடத்தில் கடத்தி வருவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வளைகுடா நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மத்தியில் தங்கம் கடத்தல் குறித்து மிகவும் கட்டுப்பாட்டு விதிகளுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஆனால் ஐரோப்பிய பயணிகளுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இருக்காது. இதனை ஒரு வாயப்பாக பயன்படுத்து அதிகளவிலான தங்கத்தை இந்தியாவிற்குள் கடத்தப்பட்டுள்ளது.
நவம்பர் 10ஆம் தேதி பிராக்பூரூட் வழியாக வந்த 67 மற்றும் 65 வயதுடை ஆண், பெண் 25.54 லட்சம் ரூபாய் மதிப்பிலான 995 கிராம் தங்கத்தை கடத்தி வந்துள்ளனர்.