இரண்டு நாட்களுக்கு முன்பு பிதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு டிஜிட்டல் இந்தியாவை ஊக்குவிக்கச் செக் புக்குளை தடை செய்யும் எண்ணத்தில் இருப்பதாகச் செய்திகள் வெளியாகியது. இந்தச் செய்திகளை நாமும் வெளியிட்டு இருந்தோம்.
நிதி அமைச்சகம் நேற்று இறவு செக் புக்குகளைத் தடை செய்யும் எண்ணம் ஏதும் இல்லை என்று டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது.
அனைத்து உடங்களும் இந்திய அரசு செக் புக்குகள் சேவையினை ரத்துச் செய்ய இருப்பதாகச் செய்திகள் வெளியானதை மத்திய அரசு மருத்துள்ளது. மத்திய அரசு அப்படி ஒரு எண்ணம் ஏதும் இல்லை என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கந்தவேல்
டிஜிட்டல் இந்தியாவின் அடுத்தக் கட்டமாக மத்திய அரசு செக் புக்குகளைத் தடை செய்ய வாய்ப்புகள் உள்ளதாக அனைத்து இந்திய வர்த்தகர்கள் அமைப்பின் மூத்த தலைவர் பிரவின் கந்தவேல் அன்மையில் தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து ஊடகங்களும் செக் புக்குகள் தடை செய்யப்பட உள்ளது என்று தெரிவித்தன,
ஏடிஎம்
இந்தியாவில் உள்ள 80 கோடிக்கும் அதிகமான ஏடிஎம்- டெபிட் கார்டுகளில் 95 சதவீதம் ரொக்க பணம் எடுப்பதற்காகவே பயன்படுத்துவதாகவும், 5 சதவீதம் மட்டுமே மின்னணு பரிவர்த்தனைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
வணிகர்கள்
தற்போது மத்திய அரசு கொண்டு வர இருக்கும் இந்தச் செக்குகளைத் தடை செய்யும் முடிவால் 95 சதவீதம் வரை செக் பரிவர்த்தனைகளை நம்பி உள்ள வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே ரொக்க பண மதிப்பை நீக்கியதில் பெரிதும் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்து இருந்தனர். அப்போதும் இவர்களுக்குச் செக் புக் பரிவர்த்தனை முறை பெரிதும் உதவியது.
ஆர்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் 17.9 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும், பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளை அடுத்து 16.3 லட்சமாக உள்ளது என்றும் 31 சதவீதம் வரை டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மானியம்
ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு 25,000 கோடி ரூபாயும், பாதுகாப்பு அம்சங்களுக்காக 6,000 கோடி வரையிலும் மத்திய அரசுக்குச் செலவாகிறது.