மத்திய அரசு ஊழியர்களின் டெப்டேஷன் அலவென்ஸ் 2,000 ரூபாயில் இருந்து 4,500 ரூபாயாக உயர்த்திப் பணியாளர்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான முடிவு 7வது சம்பள கமிஷன் பரிந்துரையின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது.
தான் பணிபுரியும் அதே நிலையத்தில் டெப்டேஷன் பணி செய்யும் போது அடிப்படை சம்பளத்தில் இருந்து 5 சதவீதம் அலவென்சாகக் கிடைக்கும். ஆனால் அதிகபட்சம் 4,500 ரூபாய் மட்டுமே கிடைக்கும்.
தான் பணிபுரியும் நிலயம் இல்லாமல் வேறு நிலையத்தில் பணிபுரியும் போது 10 சதவீதம் அடிப்படை சம்பளம் என அதிகபட்சம் 9,000 ரூபாய் வரை கிடைக்கும்.
தற்போது வரை டெப்டேஷன் அலவென்ஸ் அடிப்படை சம்பளத்தில் இருந்து 5 சதவீதம் அல்லது அதிகபட்சம் 2,000 ரூபாய் அளிக்கப்படும். பிற நிலய ஊழியர்களுக்கு 10 சதவீதம் அடிப்படை ஊதியம் அல்லது அதிகபட்சம் 4,000 ஒரு மாதத்திற்கு டெப்டேஷன் அலவென்ஸ் கிடைக்கும்.