மகேந்திரா & மகேந்திரா கார் தயாரிப்பு நிறுவனம் உபர் நிறுவனத்துடன் இணைந்து மின்சாரக் கார்களை நாடு முழுவதும் டாக்ஸி சேவைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
மகேந்திரா நிறுவனத்தின் எலக்டிரிக் கார்களை ஏற்கனவே சில டாக்ஸி நிறுவனங்கள் பயன்படுத்தி வரும் நிலையில் உபர் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது
உபர்
எனவே விரைவில் உபர் செயலியில் கார் புக் செய்யும் போது எலக்ட்ரிக் கார் தேர்வு செய்து பயணம் செய்ய முடியும். இதே போன்று சில நட்களுக்கு முன்பு ஓலா நிறுவனத்துடன் இணைந்து எலக்டிரிக் கார் டாக்ஸி சேவையினை டாடா நேனோ நிறுவனம் வழங்க முடிவு செய்துள்ளது.
போட்டி
மகேந்திரா மற்றும் உபர் நிறுவனத்தின் இந்தக் கூட்டு டாடா மற்றும் ஓலா நிறுவனத்திற்குப் போட்டியாக உருவாக்கப்பட்டதே என்று துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எலக்டிரிக் டாக்ஸி சேவை
டெல்லி போன்ற முக்கிய நகரங்கள் காற்று மாசுபாட்டில் சிக்கி தவித்து வரும் நிலையில் செயலி மூலம் டாக்ஸி சேவை அளித்து ஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் எலக்டிரிக் கார்களைத் தங்களது சேவையில் இணைத்து வருகின்றன.
டாடா மற்றும் மகேந்திரா
மேலும் டாடா மற்றும் மகேந்திரா போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்களும் எலக்டிரிக் கார் தயாரிப்பின் மீது கவனம் செலுத்தி வருகின்றன. இதனால் விரைவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குப் போட்டியாகச் சாலைகளில் எலக்டிரிக் வாகனங்களை அதிகளவில் பார்க்க முடியும்.