இந்தியாவில் விமானப் போக்குவரத்து வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இத்துறையில் இருக்கும் இடர்களைக் களையும் விதத்தில் மத்திய அரசு, பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை அளிக்கும் நிறுவனங்கள் டிக்கெட் ரத்து செய்தால் அதற்காக வசூலிக்கும் தொகை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளது.
3000 ரூபாய்
இந்தியாவில் இயங்கி வரும் சில விமான நிறுவனங்கள் பயணிகள் முன்பதிவு செய்த டிக்கெட்-ஐ ரத்து செய்தால் அதற்கு 3000 ரூபாய் வரையிலான தொகையை வசூலிக்கப்படுகிறது.
இந்தக் கட்டணம் மிகவும் அதிகமானது. இதனை உடனடியாகக் குறைத்து மக்களுக்கு ஏதுவான ஒரு விலையை அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள மத்திய அரசு.
உதான் திட்டம்..
மத்திய அரசு அறிவித்துள்ள உதான் திட்டத்தில் ஒரு மணிநேரத்திற்குக் குறைவான பயண நேரம் கொண்டுள்ள பயணத்தில் அதிகப்படியாக 2,500 ரூபாய் வரையில் மட்டுமே கட்டணம் என்ற உதான் திட்டம் இருக்கும் நிலையில், டிக்கெட் ரத்துக் கட்டணம் 3,000 ரூபாய் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
இதனை உடனடியாகக் குறைக்க வேண்டும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
குறைவான கட்டணம்
இந்தியாவில் விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாகியுள்ள நிலையில், பணிகள் தற்போது அதிகளவில் மூன்கூட்டியே திட்டமிட்டு சில மாதங்களுக்கு முன்பாகவே டிக்கெட்-ஐ முன்பு செய்கின்றனர். இதனால் பயணிகளின் விமான டிக்கெட் கட்டணம் மிகவும் குறைவாக உள்ளது.
இத்தகைய பயணிகள் சில நேரம் பயணத்தின் சில நாட்களுக்கு முன்பு டிக்கெட்டை ரத்து செய்தும் காரணத்தால் விமான நிறுவனங்கள் ரத்துக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
பிற கட்டணம்
அதேபோல் தற்போது விமான நிறுவனங்கள் டிக்கெட் ரத்துக் கட்டணத்தை அதிகரித்துள்ளதைப் போல உள்ளூர் விமானப் பயணத்தின் போது 15கிலோக்கு அதிகமான இருக்கும் பேகேஜ்களுக்கு வசூலிக்கும் கட்டணத்திற்கு அதிகளவிலான தொகையை வசூலிக்கிறது.
இது கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட மாற்றங்கள்.
விமானப் பயணிகள்
இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 3.5 வருடத்தில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இத்தகைய உயர்வு உலகில் ஏந்தொரு நாட்டிலும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பெரும்பாலானவர்கள் முதல் முறை விமானப் பயணம் செய்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.