மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஸ்மார்ட்போன் வாயிலான வங்கி மத்தியிலான பணப் பரிமாற்ற சேவை அளிக்கும் யூபிஐ செயலி தற்போது மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் நவம்பர் மாதம் மட்டும் யூபிஐ தளத்தில் 105 மில்லியன் பணப் பரிமாற்றங்கள் நடைபெற்று கடந்த மாதத்தை விடவும் 38 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது எனத் தேசிய பேமெண்ட் கார்பரேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
யூபிஐ தளம் அறிமுகப்படுத்திய முதல் இதுவே அதிகப்படியான பரிமாற்றம் நடந்ததும் நவம்பர் மாதத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்காலகட்டத்தில் பரிமாற்றங்களின் மதிப்பு 37 சதவீதம் உயர்ந்து 9,679 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில் இந்தியாவில் சுமார் 61 வங்கிகள் மத்தியில் யூபிஐ தளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தளத்தை அடிப்படையாகக் கொண்டு கூகிள் நிறுவனம் இந்தியாவில் இந்தியர்களின் பயன்பாட்டிற்காகத் தேஜ் ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது.