இந்தியாவின் முதல் ஜிஎஸ்டி பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி அருண் ஜேட்லி தாக்கல் செய்ய உள்ளார்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இந்தியாவின் முதல் ஜிஎஸ்டி பட்ஜெட்டை வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி வாசிக்க இருக்கிறார். பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டம் ஜனவரி 30-ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் உறையுடன் துவங்க உள்ளது என்றும் மூத்த அரசாங்க அதிகாரி தகவல் அளித்தார்.

இந்தியாவின் முதல் ஜிஎஸ்டி பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி அருண் ஜேட்லி தாக்கல் செய்ய உள்ளார்..!

பொருளாதாரச் சர்வே ஜனவரி 31-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தக்கல் செய்யப்பட இருக்கிறது. பல ஆண்டுகளாகப் பிப்ரவரி இறுதியில் தாக்கல் செய்யப்பட்டு வந்த மத்திய பட்ஜெட்டினை 2017-ம் ஆண்டு முதல் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்து வருகின்றனர்.

பட்ஜெட் தாக்கல் 1 மாதம் முன்பே செய்யப்படுவதால் நிதி ஆண்டுத் துவக்கமான ஏப்ரல் 1 முதல் நலத்திட்ட நிதிகள் கிடைக்கும் என்றும் இதனால் அனைத்து திட்டப்பனிகளும் வேகமாகவும், குறித்த நேரத்திலும் நடக்கும் என்று தெரிவித்துள்ளனர். அதே போன்று சென்ற ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட்டும் நீக்கப்பட்டு ஒரே பட்ஜெட்டாக வாசிக்கப்பட்டு வருகிறது.

குளிர்காலக் கூட்டம் முடிவடைந்த 1 மாதத்திற்குப் பிறகே எப்போதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம் ஆகும்.

2017 ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு முதன் முறையாகப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாலும், அருண் ஜேட்லி வாசிக்க இருக்கும் 5வது பட்ஜெட் என்பதும் சிறப்பம்சமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's first Post GST Budget Likely To Be Presented on February 1

India's first Post GST Budget Likely To Be Presented on February 1
Story first published: Monday, December 4, 2017, 10:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X