இந்தியாவின் டாப் 100 நிறுவனங்கள் இன்றைய சந்தை நிலவரத்தின் படி 38.9 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களைப் பெற்றுள்ளதாகவும், அதிலும் டாடா குழுமத்தின் டிசிஎஸ் நிறுவனம் முதல் இடத்தினைப் பிடித்துள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வு அறிக்கையினை இந்தியாவின் பிரபல பங்கு சந்தை நிறுவனமான மோத்திலால் ஓஸ்வால் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிசிஎஸ்
2012 முதல் 2017 வரை டாடா குழுமத்தின் டிசிஎஸ் நிறுவனம் 2.50 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களைச் சேர்த்து ம்னுதல் இடத்தினைப் பிடித்துள்ளது.
எச்டிஎப்சி வங்கி
ஐடி நிறுவனத்தினைத் தொடர்ந்து தனியார் வங்கி நிறுவனமான எச்டிஎப்சி 2.31 லட்சம் கோடி சொத்துடன் இரண்டாமிடத்தினைப் பிடித்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
இந்தியாவின் மிகப் பெரிய கோடிஸ்வரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 1.89 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 3ம் இடத்தினைப் பிடித்துள்ளது.
ஐடிசி மற்றும் மாருதி சுசூகி
ஐடிசி நிறுவனம் 1.59 லட்சம் கோடியும், மாருதி சுசூகி நிறுவனம் 1.41 லட்சம் கோடியும் சொத்து மதிப்பினையும் கடந்த 5 வருடத்தில் சம்பாதித்து முறையே 4 மற்றும் 5 வது இடத்தினைப் பிடித்துள்ளனர்.
ஆய்வு முடிவுகள்
டாப் 100 நிறுவனங்களின் சொத்து மதிப்பானது மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸில் தாக்கல் செய்துள்ள விவரங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
துறை சார்ந்த முன்னிலை
துறை சார்ந்த அறிக்கைப் படி பார்த்தால் வங்கி மற்றும் நிதி துறை மட்டும் 9.37 லட்சம் கோடி சொத்துக்களைப் பெற்றுள்ளன. அதிலும் வங்கி துறைக்கு 6.9 லட்சம் கோடி சேறும்.